மறைந்தும் மறையாமல்
மெட்டு : மலர்ந்தும் மலராத... (பாசமலர்)
ஆக்கம் : இளங்கவி. அ. நைனார் முஹம்மது அன்சாரி ஹக்கிய்யுல் காதிரிய் M.A.,
மறைந்து மறையாமல் நிறைந்து அரசாளும்
யாஸீன் கொடை வள்ளலே - திரு
முல்லை நகர்தேடி வந்து வரம் கேட்போம்
தந்து அருள்வீர்களே -
அலியின் வழிமேவி கெளதின் ஒளி வாங்கி
இலங்கும் திருத்தோன்றலே - கலீல்
நாதர் தமைத்தந்து நாளும் எமைக் காக்கும்
ஞான மறை தாங்களே... (மறைந்தும்)
ஞானக் கருகொண்டு வாழ்வின்பொருள்தந்து
வாழச் செய்தீர்களே - எமையாளச் செய்தீர்களே
தன்னை அறிகின்ற தன்னில் நிறைகின்ற
தன்மை வளர்த்தீர்களே உண்மை உரைத்தீர்களே
தன்னை அறிகின்ற தன்னில் உறைகின்ற
தன்மை வளர்த்தீர்களே. (மறைந்தும்)
ஹா´ம் குலச்செண்டு காதிர் எனக் கொண்டு
ஹல்கின் அரசானதே - நம் கல்பில்அரசாளுதே.
யாஸீன் நபியயன்றும் யாஸீன்மறையயன்றும்
பேசும் மொழியானதே - இறை பேசும்மொழியானதே.
யாஸீன் நபியயன்றும் யாஸீன்மறையயன்றும்
பேசும் மொழியானதே (மறைந்தும்)
தாயின் அன்பென்ன தந்தைபரிவென்ன
யாவும் ஈடாகுமா - குரு யாஸீன்போலாகுமா?
உள்ளம் உடைந்தாலும் உறுதிகுறைந்தாலும்
காக்கும் கரமல்லவா - நாம்கேட்கும் இடமல்லவா?
உள்ளம் உடைந்தாலும் உறுதி குறைந்தாலும்
காக்கும் கரமல்லவா. (மறைந்தும்)
நாட்ட தேட்டங்கள் வறுமைவாட்டங்கள்
கேட்டுக் காப்பாற்றுவீர் -பிணி நீக்கிக் காப்பாற்றுவீர்
நாடிப் போகின்ற வேண்டிச்சேர்கின்ற
கூட்டில் எமையாக்குவீர் -என்றும் கூட்டில் எமையாக்குவீர்.
நாடிப் போகின்ற வேண்டிச் சேர்கின்ற
கூட்டில் எமையாக்குவீர். (மறைந்தும்)
கிரங்கும் நேரங்கள் மயங்கும்பாரங்கள்
இரங்கி அருளாற்றுவீர் -குருவருளில் இளைப்பாற்றுவீர்
இந்த உடலும் உயிர்யாவும்மறைந்து மரித்தாலும்
தங்கள் அடியாகவே வேண்டும்தங்கள் அடியாகவே
இந்த உடலும் உயிர்யாவும்மறைந்து மரித்தாலும்
தங்கள் அடியாகவே. (மறைந்தும்)