• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012 » Dec 2012 » ​ காந்திகிராமத்தில் நடந்த இலக்கிய விழாவில்


காந்திகிராமத்தில் நடந்த இலக்கிய விழாவில் பாடியது!

ஆலிம்புலவர்


 

வானவில்லைக்

காணவில்லை!

திகைத்துத்தேடினேன்!

அதோஎன்றுகாட்ட

அன்புக்காதலிஅருகேவந்தாள்!

வானவில்இடம்மாறியிருந்தது

அவள்நெற்றிப்புருவமாக!

ஆனால்

கருத்துப்போனதன்காரணம்என்ன?

அவளதுநிலாமுகத்தின்முன்அது

நிறம்மங்கிப்போனது! -


வானவில்லைஎனக்குப்பிடிக்காது!

ஏனெனில்அதற்கும்நிறவெறி  உண்டு!

வர்ணபேதம்பார்க்கும்அதற்கு

கறுப்புபிடிக்காது - அதனால்

வானவில்லைஎனக்குப்பிடிக்காது! -


வானவில்

வெயிலுக்கும்மழைக்கும்பிறந்த

வேடிக்கைக்குழந்தை!

இடியும்மின்னலும்கொண்டாடும்

வானவேடிக்கை! -

அது

விண்ணுலகதேவதைகளின்

வண்ணநிழல்!

அவர்களின்கைவளையல்! -


சொர்க்கவாசலின்

வட்டப்படிக்கட்டு!

வானவில்

மழையில்நனைந்த

மேகமங்கை

மழையிலேயேகாயவைத்த

வண்ணச்சேலை! –

அது

வானத்தொலைக்காட்சிப்பெட்டியில்

சற்றுநேரம்வந்துபோகும்விளம்பரம் ;

இல்லைநிரந்தரம்!


மேகப்பூங்காவில்

எப்போதாவதுமலரும்

ஏழுவண்ணக்குறிஞ்சிமலர்! -


மேகசபையில்

மின்னல்ராஜகுமாரனுக்கு

மாலையிடக்காத்திருக்கும்

விண்இளவரசியின்

கைபிடித்த

சுயம்வரமாலை! -


வானவில்லை

ஏறிட்டுப்பார்த்த

எங்கள்இளைஞர்கள்கேட்கின்றனர் !

கலர்இங்கே!

பிகர்எங்கே! என -


வானவில்

யாரையும்காயப்படுத்தாத

மானவில்.

இந்தவில்லை

ராமரும்ஒடிக்கமுடியாது!

ஏனெனில்அதுமாயவில்! -


வானவில்

மனிதவாழ்வின்யதார்த்தத்தை

மனிதனுக்குஉணர்த்த 

இறைவன்வரையும்உதாரண  ஓவியம்!

அதுகூறும்பாடம்

மனிதாஉன்வாழ்க்கை

அழகுதான் ! எழில்தான்!

ஆனால்அது

கொஞ்சநேரம்தான்!

கொஞ்சநேரம்தான்!