• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Jun 2012   »  ஆலோசனை

ஆலோசனை

 

 டயாபர்

குழந்தைகள் பிறந்து, குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்காவது, அவர்களுக்கு ‘டயாபர்’ அணிவிக்கப் படுகிறது. ஆனால், ‘டயாபர்’கள்  பயன்படுத்துவதால், குழந்தைகளுக்குஏற்படும் பாதிப்புகள் குறித்து பெரும்பாலான பெற்றோர் அறிந்திருப்பதில்லை.  அதோடு, சுற்றுச்சூழலுக்கும்  மாசும் ஏற்படுகிறது. 

முன்பெல்லாம் குழந்தைகளுக்குதுணியினாலான ‘டயாபர்’களே பயன் படுத்தப்பட்டன. இவை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும். 

‘டயாபர்’கள் வரத் தொடங்கின. இதன் பிரபலத்தால், துணி, ‘டயாபர்’களின் பயன்பாடு, படிப்படியாக குறைந்து விட்டது.  ஆனால்,துணி ‘டயாபர்’களால் பல்வேறு நன்மைகள் உள்ளன.

‘டிஸ்போசபிள்’ டயாபர்களால், குழந்தைகளுக்கு ரே­ஸ் எனப்படும் புண்கள், பின்பகுதியில் உராய்வு உட்பட சில பிரச்சினைகள் தோன்றுகின்றன.  இதனால், குழந்தைகள்மிகவும் அவதிக்கு ஆளாகின்றனர்.  ஆனால்,துணி டயாபர்கள் பயன்படுத்தினால், குழந்தைகளுக்குரே­ஸ் போன்றவை ஏற்படுவதுதவிர்க்கப்படுகிறது.


சுற்றுச்சூழலுக்கு உகந்தது

‘டிஸ்போசபிள்’டயாபர்களின் மேலுறை, தண்ணீர் புகாத,பாலிபுரலீன் என்ற ரசாயனத்தால் உருவாக்கப்பட்டது. பிளாஸ்டிக்வடிவத்திலான இந்த ரசாயனம், சிதைவடைய 500 ஆண்டுகாலம் தேவை.

 

உலகில் தயாரிக்கப்படும் டயாபர்களில் 70 சதவீதம், காகிதங்களில் இருந்தே    தயாரிக்கப்படுகின்றன.  இதனால், உலகளவில்,ஆண்டுக்கு 100 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன.

ஒரு மரத்தை  உருவாக்க, உரங்கள், பூச்சிமருந்துகள், தண்ணீர் என ஏராளமானவை தேவைப்படுகின்றன.  டயாபர்கள் தயாரிப்பதற்காக, அதிகளவில் மரங்கள் வெட்டப்படுவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையைஏற்படுத்தியுள்ளது. 

துணி டயாபர்கள்
,சிதைவுற 100 ஆண்டுகளே ஆகின்றன. இதே போன்று, சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தப்படும்  டயாபர்களும் உள்ளன. இந்த டயாபர்கள் ஈரமானதும் அவற்றின் உள்ளே இருப்பவற்றை தூக்கி எறிந்துவிட்டு,துவைத்த பின், மீண்டும் பயன்படுத்தலாம்.  முதல் குழந்தைக்குப் பயன்படுத்திய  இந்த வகை டயாபர்களை மீண்டும் இரண்டாவதுகுழந்தைக்கு பயன்படுத்துவதால் உலகம் வெப்பமயமாதல் 40 சதவீதம் குறையும் என சிலதகவல்கள் தெரிவிக்கின்றன.  ‘ரீயூசபிள்டயாபர்’கள் சிதைவடைய ஆறு மாத காலமே ஆகின்றன.


பணம் சேமிப்பு

‘டிஸ்போசபிள்’டயாபர்களுக்கு மக்கள் ஏராளமான அளவில் பணம்  செலவழிக்கின்றனர். ஆனால், ‘ரீயூசபிள் டயாபர்’கள், மீண்டும் பயன்படுத்தப் படுவதால், அதற்கான செலவுகுறைகிறது.  எனவே, ‘டிஸ்போசபிள்’ டயாபர்களுடன் ஒப்பிடும் போது,  ‘ரீயூசபிள்’ டயாபர்களால் அதிகளவு பணம் சேமிக்கப்படுகிறது.குழந்தைகளுக்கு பே­னாக அணிவிக்க 

விரும்பினால், அதற்காகவே, துணி டயாபர்களில், பல்வேறுவண்ணங்கள் மற்றும் பே­ன்களில் வருகின்றன. இப்போது குழந்தைகளுக்கு எந்த டயாபரை பயன்படுத்தலாம் என்ற முடிவுக்குவந்துவிட்டீர்கள் அல்லவா?

 

இணையத்திலிருந்து    தகவல்: எஸ்.எச்.எம்