• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Jun 2012   »  உமர் (ரலி) புராணம்

உமர் (ரலி) புராணம்

 

ஆசிரியர்

ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா  அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்

 

                        சிறந்தவனென்று கூற

                                    சீர்நபிஆணை யிட்டார்

                        அறந்தனைவாழ்வ தாக

                                    அமைத்ததோழர்க ளெல்லாம்

                        திறலுடனுரத்துச் சொன்னார்

                                    தீயவர்கேட்டி டற்கு

                        மிறலுறுமிறைய வன்றான்

                                    மேலினன்னுயர்வு ளானே.

 

கொண்டுகூட்டு:

 

                        (புற்கதிலாத அல்லாஹ்

                        பூரணனுயர்ந்தா னென்று,)

 

சிறந்தவன் என்று கூற சீர்நபி ஆணை இட்டார்.  அறம் தனை வாழ்வு அதாக அமைத்த தோழர்கள் எல்லாம் திறல்உடன் தீயவர் கேட்டிடற்கு உரத்துச் சொன்னார். மிறல் உறும் இறையவன் தான் மேலினன், உயர்வு உள்ளான். ஏ

 

பொருள் :

 

சிறுமையற்ற அல்லாஹ் பூரணன், உயர்ந்தவன், சிறந்தவன் என்று கூற சீருடையநபியவர்கள் ஆணையிட்டார்கள். அறத்தினையே வாழ்வாக அமைத்துக்கொண்ட தோழர்கள் எல்லாரும்வீரத்துடன் தீயவர்களாகிய பகைவர்கள் காதிற் கேட்குமாறு பலமாகச் சொன்னார்கள்.  பெருமை மிக்க இறைவன் தான் மேன்மையுற்றவன் உயர்வுள்ளவன்.

 

குறிப்பு :

 

 திறல் : வலிமை.  உரம் : பலம். மிறல் : பெருமை.  இப்பாட்டு இதன் முதற்பாட்டோடுதொடர்புடையது காண்க. 

 

 

நோயற்ற சுகவாழ்வும் அருள்வாயாக!ஆமீன்யாரப்பல் ஆலமீன்.  வல்ஹம்து லில்லாஹி ரப்பில்ஆலமீன்.