தமிழ்மானம் காத்த முஸ்லிம் வீரர்
சிவகங்கைச் சீமையின் திருப்பத்தூர் கோட்டை வாயில், சுற்றிலும் மக்கள் வெள்ளம். ஒவ்வொருவர் முகத்திலும் ஆறாத் துயரம். ஒருவர் இருவர் அல்ல. ஐநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை தூக்கிலிட்டுக்கொண்டிருக்கிறார்கள் வெள்ளையர்கள்.
முதலில் அஞ்சாநெஞ்சன்சின்னமருது. மக்கள் இதயம் துடிதுடித்தது. அடுத்தது சின்ன மருதுவின் மூத்தமகன், உற்றார் உறவினர், போர்வீரர்கள், கடைசியாக பெரிய மருது. இப்படி மருதுபாண்டியர் வம்சத்தையே கூண்டோடு தூக்கிலிட்டனர். அழுவதைத் தவிர அந்த மக்களுக்கு எதுவும் செய்யமுடியாதநிலை.
கடைசியாக சின்னமருதுவின் இளைய மகன் துரைச்சாமி. பதினைந்துவயது பாலகன். வயதைக் காரணம் காட்டி அவனைத்தூக்கிலிடவில்லை. ஆனால் அவன் உடல் முழுதும்சங்கிலியால் பிணைத்திருந்தனர். கால்களில் இரும்புக் குண்டை கட்டிவிட்டிருந்தனர். தந்தை, பெரியப்பா, சகோதரன், பங்காளிகள்தூக்கில் தொங்கும் காட்சியைக் காணவைத்தது கொடுமை. அவனோடு சேர்த்து ஒரு மாவீரனையும் உடல் முழுதும் இரும்புச் சங்கிலிகளல் பிணைத்துவைத்திருந்தார்கள். நடக்க முடியாத அளவிற்கு இரும்புக் குண்டுகளை அந்த வீரனின் கால்களிலும் இறுகக்கட்டி விட்டிருந்தார்கள்.
இந்த வீரனை விட்டுவைத்தால், துரைச்சாமியை வெள்ளையருக்கு எதிராக வளர்த்துஉருவாக்கி விடுவான் என்னும் பயம் பறங்கியருக்கு. அதனால் அவனையும் சேர்த்து 72 பேரை சங்கிலியால் கட்டி நாடு கடத்த உத்தரவிட்டான்கர்னல் வெல்ஷ் என்ற வெள்ளை அதிகாரி. 72 பேரில்இவர்கள் இருவருக்கு மட்டுமே காலில் இரும்புக் குண்டுகளைப் பிணைத்து இருந்தார்கள்.
அந்த வீரன் இச்சப்பட்டிஅவில்தார் சேக் உசேன். மருது பாண்டியரின் போர்ப்படைத் தளபதிகளில் ஒருவர். முதன்மையானவர்.
மாவீரன் பூலித்தேவன், கட்டபொம்மன், மருதுபாண்டியர்காலங்களில் இஸ்லாமிய சகோதரர்கள் படைத்தளபதிகளாவும் முக்கிய பொறுப்புக்களை வகித்ததாகவும்நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் கூறுகின்றன.
இராமநாதபுரத்திற்குஜாக்ஸன் துரையைச் சந்திக்க கட்ட பொம்மன் சென்ற போது, அவனோடு சென்றவர்கள் என்று,
மம்மது தம்பியும்
முகம்மது தம்பியும்
மார்க்கமுள்ள தம்பி
வரிசையீந்தான்
தர்மகுணவான்
இபுராமு சாகிபும்
தம்பி இசுமாலு
ராவுத்தனும்...”
என்று வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் (பேரா. வானமாமலை பதிப்பு- 1971) கூறுகிறது. அவர்களில் முக்கியமானவராக, நாட்டுப்பற்றுள்ள இஸ்லாமிய வீரராக சின்னமருதுவின்படைத்தளபதி சேக் உசேன் குறிப்பிடப்படுகிறார்.
தெற்கே சின்ன மருதும், ஊமைத் துரையும், விருப்பாச்சிகோபால் நாயக்கரும், தீரன் சின்னமலையும் சேர்ந்து உருவாக்கிய திண்டுக்கல்புரட்சிப் படைக்கு யாரைத் தளபதியாக அறிவிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.
‘நானே அதற்கு தலைமைஏற்பேன்’ என்று திண்டுக்கல் புரட்சிப் படையின் எழுச்சிமிக்க வீரராக தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டவர் இந்த சேக் உசேன்தான். வெள்ளையரை இந்தநாட்டை விட்டே விரட்ட, உருவான கூட்டுப்படையின்முதல் தாக்குதலுக்கு தலைமை தாங்குவது என்பது சாதாரண வியமல்ல.
அதற்கு வீரம் மட்டுமல்ல விவேகம், நாட்டுப்பற்று, நிர்வாகத்திறன் என்று சகல வியங்களிலும் திறமை வேண்டும். அதனைச் செய்து தன்னைச் சிறந்த தமிழ்ப் போராளியாகபிற்காலத்தில் வரலாற்று ஆசிரியர்கள் புகழும் அளவிற்குஉயர்ந்து நின்ற வீரர் சேக் உசேன்.
சின்னமருது பல வெற்றிகளைக் குவிக்க பக்கபலமாக இருந்ததால் இவர்மேல்வெள்ளையருக்குக் கோபம். கடைசியாக நடந்த காளையார்கோவில்போர் பல மாதங்களாக முடிவுக்கு வராமல் இருந்ததற்கு சேக் உசேன் போன்ற சின்னமருதுவின்படைத்தளபதிகளின் வீரமிக்க போராட்டமே என்று கருதினர். அதனால் போர் முடிந்ததும் சேக் உசேனை பொறி வைத்துப்பிடித்து வந்தனர். மலேசியாவிற்குச் சொந்தமானபினாங்கு தீவுக்கு உடனே இவரை நாடு கடத்த உத்தரவிட்டார்கள்.
இரும்புக் குண்டுகள் பிணைக்கப்பட்ட நிலையில் சேக் உசேனும் துரைச்சாமியும்கப்பலில் ஏற்றப்பட்டனர். கப்பல் நகர்ந்தது. அது எங்கே போகிறது? என்றே அவர்களுக்குத்தெரியாது. கப்பலில் இருந்தபடி தன் தாய்நாட்டையும்15 வயது துரைச்சாமியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார் சேக் உசேன். துரைச்சாமிக்கு முடிந்த அளவுக்கு உதவ வேண்டும் என்றுஉறுதி பூண்டார். கடலிலேயே நாட்கள் பல கடந்தன.
சேக் உசேன், துரைச்சாமி உட்பட 72 பேரும் இந்தத் தீவில் கொண்டு வந்து விடப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு இது எந்த இடம், இங்குள்ளவர்கள் என்ன மொழி பேசுவார்கள் என்றே தெரியாது.
உடல் முழுதும் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருப்பதால், இவர்கள் நடக்கும்போது‘கிளிங்! கிளிங்!’ என்ற சத்தம் எழுந்தது. இவர்கள்தப்பிப் போகாமல் இருக்கவே இப்படியயாரு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்குள்ளவர்கள், ‘கிளிங் கிளிங்’என்ற சத்தம் வந்ததால் இவர்களை ‘கிளிங்கர்கள்’என்றே அழைத்தனர். இதுவே நாளடைவில் பிறமொழியைச்சேர்ந்தவர்கள், பினாங்குசென்ற தமிழர்கள் அனைவரையும் ‘கிளிங்கர்கள்’ என்றே அழைத்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
சேக் உசேனுக்கு இரு கால்களிலும் இரும்புக் குண்டுகள் இணைக்கப்பட்டிருந்ததால், அவரால் சிறிதுதூரம் கூட நடக்க முடியாது. என்றாலும் கடுமையானவேலைகளைக் கொடுத்து வாட்டினார்கள். சரியாகஉணவு தராமல் வாட்டி வதைத்தார்கள். ஒரு கட்டத்திற்குமேல்உணவே தராமல் சித்திரவதை செய்யத் தொடங்கிவிட்டனர்.
எந்த நாட்டில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் உணவுகூட தராமல் காலம்தள்ளியது கொடுமை.
ஒரு நாள்,தங்களை எந்த வெள்ளைக்கார அதிகாரி இந்தத் தீவிற்கு நாடு கடத்தச் சொல்லிஉத்தரவிட்டானோ, அதே கர்னல் வெல்ஷ் துரை தன் மனைவி மக்களோடு விடுமுறையைக்கழிக்க இந்தத் தீவிற்கு வந்திருந்தான்.
உடன் இருந்தவர்கள் எல்லாம் வெல்ஷைப் பார்த்து கருணை மனு கொடுக்கச்சொன்னார்கள். காலில் உள்ள இரும்புக் குண்டுகளைமட்டுமாவது அகற்றச் சொல்லச் சொல்லி மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.
நீண்ட மெளனத்திற்குப்பிறகு சேக் உசேன், “என் தாய் மண்ணிற்காகப்போராடியவன் நான். என்னை விடுவிக்க இந்த இழிநிலை வெள்ளையர்களிடம் போய் கெஞ்சமாட்டேன். செத்தாலும் சாவேனே தவிர, அந்தச் செயலை மட்டும்செய்ய மாட்டேன்” என்று வீராவேசமாக பேசியிருக்கிறார்.
ஆனால் துரைச்சாமி, “நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன் என்பதைஎன் தாய் நாட்டிற்குத் தெரியப்படுத்துங்கள்” என்று ஒரு மனு கொடுத்தார். அது நிராகரிக்கப்பட்டதாககூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் உணவு இன்றி, இரும்புக் குண்டுகளால் நகரக்கூட முடியாமல் யாரிடமும்எதையும் யாசகமாகக் கேட்காமல் சேக் உசேனின் உயிர் அந்த பினாங்கு மண்ணில் அடங்கியது.
இவர்கள் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தப்பட்ட வியமே, கர்னல் வெல்ஷ்துரை, “எனது இராணுவ நினைவுகள்” என்ற நூலில் குறிப்பிட்ட பின்னர்தான்உலகிற்கே தெரியும்.
இனமொழி வேறுபாடின்றி தமிழ் மண்ணுக்காகக் போராடிய சேக் உசேன் போன்றபல தன்மானம்மிக்க வீரர்களின் வரலாறுகள் இன்னும் அதிகளவில் வரவேண்டும். அதுவே நம் வீரமண்ணிற்கு நாம் செய்யும் வணக்கமாகும்!
நன்றி : குங்குமம்