பெருமானாரின்முன்னறிவுப்பும் - நிறைவேறலும்
கலீபா பு.முஹம்மது காசீம், ய.றீஉ.,னி.சிd., பெரம்பலூர்
நமது அண்ணலெம் பெருமான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒருநாள் மதீனாவின் பள்ளி வாயிலில் அமர்ந்து மக்களுக்கு அறபோதம்நல்கிக் கொண்டிருந்தார்கள். அப்போதுஅவர்கள் தங்களின் செங்கமலத் திருமுகத்தை எமன் நாட்டின் பக்கத்தில் திருப்பிபுன்முறுவல் பூத்தவர்களாய் “திட்டமாக நான் எமன் நாட்டிலிருந்து வரும் அழகியஅன்புத் தென்றலின் மென் சுகத்தை நுகர்கின்றேன்” என்று மொழிந்தனர்.
அதன்பின்பு அவர்கள் “என்னைப் பின் தொடரும் ஒருமனிதரின் பரிந்துரை காரணமாக ரபீஆ, முலறுஆகிய இரு கூட்டத்தினரின் ஆடுகளின் மீதுள்ள உரோமத்தின் எண்ணிக்கை அளவுள்ள மக்கள்சுவனம் புகுவர்” என்று திருவாய் மலர்ந்தனர். அண்ணலாரின் இச்சொற்கள் அவர்களின் தோழர்களுக்கு அளவற்ற வியப்பை அளித்தது. “நாயகமே!. அந்நல்லார் யார்? நலமெல்லாம் திரண்ட அந்தப் புனிதர் யார்?” என்றுஅவர்கள் பெரிதும் ஆவலுடன் வினவினார்கள்.
அண்ணலெம் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அவர் அல்லாஹ்வின்நல்லடியார். எமன் நாட்டிலுள்ள “கரன்”என்னும் ஊரில் வாழ்ந்து வருகிறார்” என்று பதிலிறுத்தனர். “அவர் தங்களை வந்து தரிசித்துள்ளாரா?” என்று தோழர்கள் வினவ, “இல்லை. அவர் என்னைத் தம்புறக்கண்ணால் தரிசிக்காத போதிலும், அகக்கண்ணால்தரிசித்துள்ளார்” என்று மறுமொழி பகர்ந்தனர் அண்ணல் அவர்கள்.
அப்போது அண்ணல்அவர்களின் அன்புத் தோழர்கள் அண்ணல் அவர்களை நோக்கி, “அவர் ஏன் தங்களை தரிசிக்க வரவில்லை?” என்றுவினவினார்கள். அதற்கு அண்ணலார் ‘அவர் இறைவணக்கத்தில் தம்மை மறந்து, தம் சுற்றம் மறந்து, தம் சூழல் மறந்து மூழ்கி இருப்பதன் காரணமாகவும், என்னுடையவழி முறையை (ரீஅத்தை) பேணுதலுடன்பின்பற்றி வருவதன் காரணமாகவும் அவர் என்னை தரிசிக்க வரவில்லை. அவரின் வயோதிக கண்ணிழந்த அன்னைக்கு பணிவிடைசெய்தபின் ஆடு மேய்த்து அதிலிருந்து கிடைக்கும் சிறிதளவு வருவாயைக் கொண்டு அவர் தம் அன்னைக்கு உணவளித்துவருகிறார்’ என்று கூறினார்கள்.
அதன்பின்தோழர்கள் அண்ணல் அவர்களை நோக்கி “அவரை தரிசிக்கும் பேறு எங்களுக்குக் கிடைக்குமா?”
என்று வினவினார்கள். ‘கிடைக்காது’ என்று அண்ணல் அவர்கள்மறுமொழி பகர “அபூபக்கருக்கு?” என்றுஅடுத்த வினா எழுப்பினர் தோழர்கள். “அவருக்கும் கிடைக்காது” என்று திடமாக விடைபகர்ந்த அண்ணலார் அவர்கள் எனினும்உங்களில் உமரும், அலியும் அவரைக் காண்பார்கள்.
அவரின் உடலெல்லாம் உரோமம் முளைத்திருக்கும்,அவரின் வலது முன் கையிலும், இடது விலாவிலும்,மருக்கள் காணப்பெறும். நடுத்தர உயரமுள்ள அவர் கம்பளி உடை அணிந்திருப்பார். எப்பொழுதும் அழுது கொண்டிருப்பதன் காரணமாகஅவருடைய கண்கள் கலங்கி இருக்கும். மண்ணகத்தோர் அவரை அறியார். எனினும்விண்ணகத்தோர் அவரை நன்கு அறிந்துள்ளார்கள்.
அவருடைய இறைஞ்சுதல் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் பேறு பெற்றது. மறுமையில் நல்லடியார்களைப் பார்த்து “சுவனம்செல்க” என்று கூறப்படும் பொழுது அவரை நோக்கி, “நீர் இங்குதங்கிப் பாவிகளுக்காகப் பரிந்துரையும்” என்று கூறப்படும். அதன் காரணமாக ரபிஆ, முலறுஆகிய இரு கூட்டத்தினரின் ஆடுகளின் மீதுள்ள உரோமத்தின் எண்ணிக்கை அளவுள்ள மக்கள்சுவனம் புகுவர்.
இவ்வாறுஇயம்பிய அண்ணலெம் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதன்பின் உமர் (ரலி)அவர்களையும், அலி (ரலி) அவர்களையும் நோக்கி,நீங்கள் இருவரும் அவரைச் சந்திக்குங்கால் என்னுடைய சலாத்தை அவருக்குதெரிவித்து, என்னுடைய மேலங்கியை அவருக்கு அன்பளிப்பாய் வழங்கி, என்னைப் பின்பற்றியவர்களுக்காக இறைவனிடம் இறைஞ்சுமாறு அவரிடம் கேளுங்கள்.
அவர் வலிமார்களில் மேலானவர். நன்மையைப் பின்பற்றுபவர்களில் சிறந்தவர். (உவைஸ் கர்னீபி இஹ்ஸான்) என்று இதழ்விரித்து ஓதினர். அண்ணலெம்பெருமான் முன்னறிவிப்பு எப்போது நிறைவேறுமோ? உவைசுல் கர்னீ என்னும் நல்லாரைஎன்று காண்போமோ! என்று ஏங்கிக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குவந்த கரன் வாசிகளைச் சந்தித்துஉவைசுல்கரனீ அவர்களின் இருப்பிடம், அவரின் செயல்பாடுகள்குறித்து விவரமாக கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
ஹஜ்ஜுக் கடமைகளை எல்லாம் செவ்வனே நிறைவேற்றிவிட்டு அபூதாலிபின் மகன் அலி(ரலி) அவர்களையும் தம்முடன் அழைத்துக் கொண்டு அவர்கள் எமன் நாட்டை அடைந்து கரன்என்னும் சிற்றூரை வந்தெய்தினார்கள்.
அவ்விருவரும்அதன் அண்மை யிலிருந்த ஓடைக்குச் சென்றார்கள். ஆங்கு தம் ஒட்டகங்களை மேய விட்டு விட்டு ஒரு மர நிழலில் கம்பளி உடை அணிந்தஒருவர் அமைதியாக நின்று தொழுது கொண்டிருந்ததைக் கண்டார்கள். கண்டதும் இவர் தாம் உவைஸுல் கர்னீயாக இருப்பாரோஎன்ற எண்ணம் மேலிட ஒட்டைகைகளிலிருந்து கீழே இறங்கி அவரை நோக்கிச் சென்றனர்.
எவரோ தன் அண்மையில் நடமாடுவதை உணர்ந்தஅப்பெரியார் தொழுகையை விரைவில் முடித்துக் கொண்டு ஸலாம் உரைத்து.
“தாங்கள் யார்?” என்று வினவினார். அப்பொழுது அலி(ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களைக் சுட்டிக் காட்டி “இவர்கள் அமீருல் மூமீனீன்உமர் இப்னுகத்தாப் ஆவர். நான் அலி இப்னு அபூதாலிப் ஆவேன்” என்று மறுமொழி பகர்ந்தனர். அதைக் கேட்டதும் அவ்விருவருக்கும் மரியாதை செய்யும் பொருட்டுஎழுந்து நின்ற அப்பெரியார் “இறைவன் தங்களுக்குப்பேரருள் பாலிப்பானாக” என்று கூறி அவர்களை வாழ்த்தினார். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் அப்பெரியாரைநோக்கி, “தாங்கள் யார்? தங்களின் பெயர்யாது?” என்று கேட்டார்கள்.
”உவைஸ்”
உவைஸ் என்றபெயரைச் செவியுற்றதும் அவர்களின் உடலெல்லாம் இனித்தது, உள்ளமெல்லாம் இனித்தது, அவரகள் சற்று நேரம் இன்ப வாருதியில் மூழ்கித் திளைத்தார்கள்.
அதன்பின்அண்ணலெம் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய அடையாளங்கள் அவர்களின்உடலிலே காணப்பெறுகின்றனவா என்பதை அறிய “நல்லது, தங்களின் வலதுமுன் கையை நீட்டுங்கள், பார்ப்போம்” என்று அவர்கள் இருவரும்நவின்றார்கள்.
அவர்கள்அவ்வாறே நீட்ட அதனை உமர் (ரலி) அவர்களும், அலி (ரலி) அவர்களும் தூண்டித் துருவிப் பார்த்தார்கள். ஆ! என்ன வியப்பு! அதிலே அண்ணல் அவர்கள் கூறியஅடையாளம் அப்படியே காணப்பட்டது. அவ்வளவுதான். அம்மலர்க்கரத்தை அவர்கள் தம் மலர் விழிகளிலே ஒற்றி ஒற்றி மகிழ்ச்சிக் கண்ணீர் உகுத்தார்கள்.
உகுத்து, உகுத்து அவர்களின் கரத்தில் தங்களின்கண்ணீரைக் காணிக்கையாக வைத்தார்கள். இதன்பின் உமர் (ரலி) அவர்கள் மீண்டும் பேச்சைத் துவங்கினார்கள்.
“மாண்புமிகுமாதவத்தீர்! அண்ணல் பெருமனார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுக்குஅவர்களின் சலாத்தை தெரிவிக்குமாறு பணித்து விட்டுப் போந்தனர். எனவே முதற்கண் அவர்களின் சலாத்தை தங்களுக்குத்தெரிவித்துக் கொள்கிறோம். இரண்டாவதாகஅவர்கள் தங்களின் மேலங்கியைத் தங்களுக்கு அன்பளிப்பாக நல்குமாறு வழங்கிவிட்டுச்சென்றுள்ளனர்.
இதோ அவ்வங்கி உள்ளது. அதனைப் பெற்று மகிழுங்கள். மூன்றாவதாக முஸ்லிம்களுக்காக தாங்கள் இறைவனிடம் இறைஞ்ச வேண்டுமென்றுகூறியுள் ளார்கள்”. இவ்வாறு உமர் (ரலி)அவர்கள் பேசினார்கள்.
இப்பொழுதுஉவைஸுல் கரனீ (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, “அண்ணலெம்பெருமான் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இட்ட அருட்பணியை நிறைவேற்றுவது என் தலையாயக் கடமை. அவர்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கிய அவர்களின்சீராரும் மேலங்கியைத் தாருங்கள்.
நான்அனைத்து முஸ்லிம்களுக்காகவும் இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்” என்று கூறி எழுந்துசற்றுத் தொலைவு தூரம் சென்றார்கள். ஆங்குஓரிடத்தில் தலையைத் தரையிலே வைத்து முஸ்லிம்கள் அனைவருக்காகவும் இறைவனிடம் மன்றாடினார்கள்.
“தாங்கள்அண்ணலெம் பெருமானின் அன்புத் தோழர்கள் தாமே அண்ணலெம் பெருமானுக்கு உஹத் போர்க்களத்தில் வைத்து பல் முறிந்து (ஹீதாகி) விழுந்த பொழுது, தாங்கள் அவர்களின் உண்மையான தோழர்களாயிருப்பின் தாங்களும் ஏன் அதுபோன்றுதங்களின் பல்லை விழச் செய்யவில்லை. நட்பு என்றால் அஃதன்றோ உண்மையான நட்பு! என்னைப்பாருங்கள்! நான் என் பற்கள் அனைத்தையும் பிடுங்கி விட்டேன்.
நான் ஒரு பல்லைப் பிடுங்க, அது எம்பெருமானுக்கு வீழ்ந்த பல்லாக இல்லாதிருக்குமோ என்ற ஐயம் எனக்குஏற்பட, அடுத்த ஒரு பல்லை நான் பிடுங்க, அதேபோன்ற ஐயம் எனக்கு மீண்டும் முளையிட, அவ்வாறுநான் என் பற்கள் அனைத்தையும் பிடுங்கிவிட்டேன்” என்று கூறித் தம் பொக்கைவாய்திறந்து புன்னகை பூத்தனர் அப்பெரியார்.
அது கண்டு நபித் தோழர்கள் இருவரும் நவிலவொண்ணாவியப்பெய்தினார்கள். உண்மையான முஹப்பத்தின் அர்த்தத்தையும், உண்மையான முஹம்மதின் தாற்பரியத்தையும்உவைஸ் கர்னீ (ரலி) அவர்களுடைய சிறப்பான வாழ்விலிருந்து நாம் அறிந்து கொண்டோம்.அண்ணலெம் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னறிவிப்புப்படி உவைஸ்கரனீ (ரஹ்) அவர்கள் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் இறைவனிடம் இறைஞ்சியுள்ளகாரணத்தால் ரபீஆ, முலறு ஆகிய இரு கூட்டத்தினரின் ஆடுகளின்மீதுள்ள உரோமத்தின் எண்ணிக்கை அளவுள்ள மக்கள் சுவனம்புகுவர் என்பது திண்ணம். அந்தநல்லடியார்களின் கூட்டத்தில் ஹக்கு சுப்ஹானஹு தஆலா நம் அனைவரையும் சேர்த்துபேரருள்புரிவானாக ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!