விழாச் சொற்பொழிவுகள் - 1
சங்கைமிகு ஸய்யித் மஸ்ஊத் மெளலானா அல்ஹாதி அவர்கள் ஆற்றிய தலைமை உரையிலிருந்து...
காலத்தின் அதிபராகவும்- இந்தக் காலத்தின் நிர்வாகத்தைக் கைக் கொண்டுள்ள ஆட்சியாற்றும் சர்வ வல்லமைமிக்க சக்தியாகவும் விளங்கும் நமது சங்கைக்குரிய ஷைகு நாயகம் அவர்களின் 76 ஆவது உதய தினவிழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்தவிழா ஏற்கனவே நாகூர் ஷரீபில் கொண்டாடப்பட்டுவிட்டது.
எப்போதும், உதய தின விழாவின் போது, ஷைகு நாயகமவர்கள் இலங்கையில் இருப்பார்கள். இங்கு நாம் சிறப்பாகக் கொண்டாடுவோம். ஆனால், இந்தமுறை நமது ஷைகு நாயகமவர்களின் உதயதினவிழாவான வ்வால் பிறை 16 அன்று, எனது பேத்தியின் திருமணத்திற்காக நமது வாப்பா நாயகமவர்கள் விஜயம் செய்தார்கள். அன்றைய தினம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறப்பட்டது. திருமணத்திற்கு வந்திருந்த முரீதுப்பிள்ளைகள், அஹ்பாபுகள் எல்லாரும் அவ்வைபவத்தில் கலந்து கொண்டார்கள். அன்றைய தினம் மேலும் ஒரு சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. எப்போதும் வாப்பா நாயகமவர்கள் நாகூர் ரீபிற்கு விஜயம் செய்யும்போது, ரவ்ழாவுக்கு வெளியில் நின்று தான் ஜியாரத் செய்வார்கள். இந்த முறை, “உள்ளே சென்று ஜியாரத் செய்யலாம் மாமா” என என் பிள்ளைகள் கேட்டுக் கொண்டதற்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் வாப்பா நாயகமவர்கள் ரவ்ழாரீபின் அருகே உள்ளே சென்று ஜியாரத் செய்தார்கள்.
இந்த நிகழ்வின் தத்துவம் என்னவென்றால், தம்முடைய பேரரும், இந்தக் காலத்தின் அதிபருமாகிய நம் ஷைகு நாயகமவர்களை, நாகூர் நாயகம் (ரலி) அவர்கள், தம் அருகில் உள்ளே அழைத்து, பிறந்த நாள் வாழ்த்துக் கூறியிருக்கிறார்கள் என்று தான் அர்த்தம். இவ்வாறான உயர்வு கொண்ட காலத்தின் அதிபருடைய உதய தினவிழாவை நாம் பேருவகையோடு கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். இந்த விழா கொண்டாடப்படுவதன் மூலம் நாம் என்ன பயன் பெறுகின்றோம் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ரசூல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாது விழாவைக் கொண்டாடும் போதும், அவர்கள் மீது ஸலவாத்து சொல்லும் போதும், முஉமீன்களுடைய உள்ளங்கள் ஹயாத்தாகின்றன. அதைப்போல் நமது ஷைகு நாயகவர்களின் உதயதின விழாவைக் கொண்டாடும் நமது உள்ளங்களும் அசுத்தங்கள் அகற்றப் பட்டு,பரிசுத்தமாகிறது- ஹயாத்தாகிறது - உயிர் பெறுகின்றது.
இன்றைய உலகில் நாம் எத்தனையோ ஷைகுமார்களைப் பார்க்கின்றோம். அவர்களெல்லாம் பெரிய பெரிய தாடிகளோடும் பச்சைப் பட்டாடைக் கோலத்தோடும் மிடுக்காகக் காட்சி தருகின்றனர். ஆனால், நமது ஷைகு நாயகம் அவர்களின் தோற்றம் எப்படி இருக்கின்றது?
எளிமையின் ஏந்தலாக, அடக்கத்தின் இருப்பிடமாக, நற்குணத்தின் உறைவிடமாக - எவ்வளவு எளிமையாக உள்ளார்கள்! பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோன்றலாக- அவர்களையே காணும் படியாக நமக்கெல்லாம் காட்சி தருகின் றார்கள். நமது ஷைகு நாயகமவர்களின் ஒவ்வொரு சொல்லும் செயலும் ஆற்றலும் நம் கண்முன்னால், நமது அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தாம் ஞாபகப் படுத்துகின்றது.
காலத்தின் அதிபர்களாக இருக்கின்ற குத்புமார்கள், ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கலீபாக்களாக இருக்கின் றார்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், குத்புமார்களுடைய ஹகீகத்தாக இருக்கின்றார்கள். இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.“உங்களுடைய ரசூல் உங்களிடம் (நிலைத்து) இருக்கிறார்கள்” என்பதாக திருக்குர்ஆன் கூறுகின்றது. இதன் உள்ளமையைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது ஷைகு நாயகம் அவர்கள், காலத்தின் யதார்த்தமாக - ரசூல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உண்மைப் பிரதிபலிப்பாகத் திகழ்கிறார்கள்.
மற்ற மற்ற ஷைகுமார்கள் தங்கள் முரீதீன்களுக்கு என்ன சொல்லித் தருகிறார்கள்? இன்ன இன்ன அவ்ராதை இதை ஓதி வாருங்கள்! நன்மை பயக்கும் என்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், நமது ஷைகுநாயகம் அவர்கள் பைஅத் பெறும்போது என்ன சொல்கின்றார்கள்? “நீங்கள் ஐந்து நேரம் தொழுங்கள், தினமும் காலையில் குர்ஆன் ரீப் ஓதி வாருங்கள், ஞானக் கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள், பிறை 14ல் ராத்திபு மஜ்லிசில் கலந்து கொள்ளுங்கள், நல்லதையே நினையுங்கள், நல்லதையே செய்யுங்கள், பிறருக்கு உதவுங்கள், மனத்தூய்மையோடு இருங்கள், எந்தக் காரியத்திலும் நேர்மையாகச் செயல்படுங்கள் என்றெல்லாம் நமக்கு அருளியிருக்கின்றார்கள். ஏனென்றால், இந்தக் காலம் அப்படிப்பட்ட காலம். இந்த மாதிரியான வியங்கள் அவசியமான காலம். எனவே, எல்லாவற்றிலும் பூரணத்தை விரும்பும் நமது நாயகம் அவர்கள், முரீதுப் பிள்ளைகளும் தம் வாழ்வில் பூரணம் பெற இவ்வாறு அருளுகின்றார்கள். அவர்களுடைய அருளுரைகளைக் கேட்பதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது.அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்க வேண்டும். அவர்கள் இடும் கட்டளைகளை அப்படியே பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்ற எத்தனிக்கும்போது, மனப்போராட்டம் நடக்கும். அதை வென்று, ஷைகு நாயகத்தின் அருளுரையின்படி செயலாற்ற வேண்டும்.
நமது ஷைகு நாயகம் அவர்கள், தங்களைப் போல் தங்களது முரீதுகளும் பேரின்பத்தை அடைய வேண்டும், பரிபூரணத்தின் காரணத் தத்துவத்தை உணர வேண்டும் என்றுதான் இவ்வாறு அருளுகின்றார்கள். இதற்காகத் தான் அவதரித்துள்ளார்கள்.
ஷைகு ஒருவரிடம் அவர்தம் முரீது ஒருவர், ஹக்கைக் காட்டித் தாருங்கள், ஹக்கைக் காட்டித் தாருங்கள் என்பதாக அடிக்கடி கேட்டுக் கொண்டிருந் தார். அவருக்கு சம்பூரணத்தை விளக்க விரும்பிய அந்த ஷைகு, அந்தச் சீடரை அழைத்து, பூங்காவிற்குச் சென்று வரலாம் என அழைத்துச் சென்றார். பூங்காவின் உள்ளே சென்று, ஒரு மரத்தைக் காட்டி, இது என்ன மரம் என்றார், சீடரோ அத்தி மரம் என்றார். இன்னொரு மரத்தைக் காட்டி இது என்ன மரம் என்று கேட்டார். வாழை மரம் என்றார். ஷைகு மீண்டும் இன்னொரு மரத்தைக் காட்டி இது என்ன மரம் என்று கேட்டார். சீடரும்தென்னை மரம் என்றார். இன்னொரு மரத்தைக் காட்டி இது என்ன மரம் என்று கேட்டார். சீடரும் அது மாமரம் என்று கூறினார். பின்னர், சில பூச்செடிகளைக் காட்டி, இது என்னென்ன என்று ஷைகு கேட்க, ஒவ்வொரு பூவின் பெயரையும் சீடர் சொல்லிக் கொண்டே வந்தார். இருவரும் பூங்காவின் வெளியே வந்தார்கள் அப்போது, ஷைகு தம் சீடரிடம், நாம் பூங்காவிற்குத் தானே வந்தோம், நீ எதையுமே இதுதான் பூங்கா எனச் சுட்டிக் காட்டவில்லையே? பூங்கா எங்கே இருக்கிறது சொல்? “ என்று கேட்டார். அப்போது தான் சீடருக்கு உண்மை விளங்கியது. தாம் கண்ட அத்தனையும் சேர்ந்ததுதான் பூங்கா. பூங்கா என்று தனியாக ஒன்றுமில்லை என்பதைப் புரிந்து கொண்டார். அதிலிருந்து அவர் ஹக்கைக் காட்டித் தாருங்கள் என்று தம் ஷைகிடம் கேட்பதே இல்லை. பரிபூரணத்தின் சூட்சுமத்தைப் பூங்காவின் மூலம் அவர் புரிந்து கொண்டார். நமது ஷைகு நாயகமவர்களும் இவ்வாறு பல்வேறுபட்ட உதாரணங்களை - விளக்கங்களை ஹக்கை விளங்குவதற்காக நமக்கு எடுத்தியம்பி உள்ளார்கள்.
ஹக்குடைய அருட்கடாட்சம் நமது ஷைகு நாயகமவர்களிடம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அவர்களது திரு நாவிலிருந்து ஹக்குதான் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் திருவாய் மலர்ந்தருளுகின்ற ஒவ்வொன்றும் ஹக்குடைய வெளிப்பாடே யாகும். அவர்கள் லிஸானுல் ஹக்காக இருக்கின்றார்கள். அவர்களுடைய தரஜாவை இன்னதென்று நம்மால் விவரிக்க முடியாது. ஏனென்றால், அவ்வாறான உயரிய ஸ்தானத்தில் ஹக்கால் அனுப்பபட்டிருக்கின்றார்கள். “இந்த நூற்றாண்டும் நம் கையில், வருகின்ற நூற்றாண்டும் நம்மிடத்திலே“ என்று அருளும் சக்தி யாருக்கு வரும்? கெளது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அடுத்தபடியாக, நமது வாப்பா நாயகம் அவர்கள் தாம் இவ்வாறு திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்கள். இவற்றையயல்லாம் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இமாம் அப்துல் கரீம் ஜீலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: நான் ஹிஜ்ரீ 767 - ல் கனவொன்றைக் கண்டேன். அதில் எனது ஷைகு இமாம் பக்ருத்தீன் இஸ்மாயீல் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கண்டேன். ஆனால், எனக்கு இவர்கள் தாம் ரசூல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக் கூறப்பட்டது. முதலில் எனக்கு அதன் தாற்பரியம் விளங்கவில்லை. பின்னர் தான் புரிந்தது. காலத்தின் அதிபராக - குத்புமார்களாக யார் இருக்கின்றார்களோ அவர்களின் தோற்றத்திலே,பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்சி தருவார்கள் என்பது சிலகாலம் கழித்துத்தான் தெளிவு கிடைத்தது. இது நிதர்சனமான உண்மை.
திருமுல்லைவாசலில் உள்ள ஒரு பெண்மணி, தம் இளம் வயதில் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் ரசூல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருகிறார்கள் என்று கூறப்பட்டது. இந்தப் பெண்மணியும் நாயகம் கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காணும் ஆவலில் காத்திருந்தார். ஒரு கூடத்தில் முஸல்லா விரிக்கப்பட்டிருந்தது. அதில் நமது ஷைகு நாயகம் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். இவர்கள் தாம் ரசூல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என அறிவிக்கப்படுகிறது. இந்தக் கனவின் நினைவிலேயே இருந்த அந்தப் பெண்மணி, நமது ஷைகு நாயகம் அவர்களின் விஜயத்தின் போது, அவர்களை நேரில் கண்டு பைஅத் பெற்றார். ஆகவே, நாமெல்லாம் நமது ஷைகு நாயகம் அவர்களிடம் தீட்சை பெற்றிருப்பது பாக்கியத்திலும் பாக்கியம். இதற்கு என்ன கைமாறு செய்தாலும் கடன் தீராது. ரசூல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக, தம் உடல், பொருள், ஆவி அத்தனையையும் தியாகம் செய்தார்கள். அவ்வாறான தியாக உணர்வோடுதான் நாமும் நமது ஷைகு நாயகமவர்களிடம் இருக்க வேண்டும். அவர்களிடம் நம்மை நாம் முழுவதுமாக அர்ப்பணிக்க வேண்டும். நமது ஷைகு நாயகம் அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்க வேண்டும். அதற்கு மறு பேச்சோ மறு சிந்தனையோ, மறுப்போ இருக்கவே கூடாது. அவர்கள் ஒன்றைச் சொல்கின் றார்கள் என்றால், அதற்கு மேல் வேறெதையும் நாம் சிந்திக்க வேண்டிய தில்லை. ஏனென்றால், அவர்களது சொல்லில் தான் நமக்கு நன்மை இருக்கும். சிலர் தமது அறிவாற்றலில் அதற்கு மாறாகச் சிந்திப்பார்கள். ஆனால், அதற்குத் தீர்வு ஷைகு நாயகமவர்களின் சொல்லில் தாம் இருக்கும். எனவே, அவற்றைத் தவிர நாம் வேறெவற்றையும் சிந்திக்கத் தேவை யில்லை. அவ்வாறு முழுவதும் அர்ப்பணித்த முரீதுப் பிள்ளையாக, இந்தக் காலத்தின் அதிபர் குத்புஸ் ஸமான் ம்ஸுல் வுஜூத் ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மெளலானா நாயகம் அவர்களின் அன்பும்அருளும் பெற்ற பிள்ளைகளாக என்றென்றும் ஹக்கு நம்மை ஆக்கி வைக்குமாக! என்று பிரார்த்தித்த வண்ணம் எனது உரையை நிறைவு செய்கின்றேன்.