7 ஆம் அறிவு
பிரபஞ்சத்தில் எல்லாமே அறிவு மயமாக விளங்குகிறது. ஒவ்வொரு பொருளிலும் அறிவு நிரம்பித் ததும்பிய வண்ணம் இருக்கிறது. ஆனால் அதை அறிய ஆள் வேண்டுமே!
எல்லாமே அறிவாக இருந்தாலும் அது இன்னதுதான் என அறியப்படாதிருந்தால் அதற்கு மகத்துவம் இல்லையே! அதனால் பயன் இல்லையே! எனவேதான் அறியப்படாதிருந்த அமா - கன்ஜுல் மக்ஃபீ - அறியப்படவேண்டுமென ஆசைப்பட்ட போது மனிதனை வெளியாக்கியது!
உதட்டில் பாதிபோல ஒன்றாயிருந்த அது, அடுத்த இதழாக மனிதனைப் படைத்தபோது, அது பேசப்படும் பொருளாக மாறியது. எனவே படைப்பின் நோக்கமே அறிவாக மாறியது. அதனாலேயே அறிவு அனைத்துக்கும் ஆதாரமானது. அதில் ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு என வெளியானபோது முழுமையடையாமல் ஆறாவது அறிவு வகுக்கப்பட்ட போது அந்த அறிவால் அது - இது என்ற வேற்றுமை உண்டானது.
இந்த வேற்றுமை நீங்கி, மீண்டும் ஒன்று எனும் ஒற்றுமை ஏற்பட வேண்டுமே. அந்த ஆறறிவையே மேலும் பட்டை தீட்டும்போது ஏழாம் அறிவு பிறந்தது. அந்த ஏழாம் அறிவே பூரணப்படும் போது எட்டாம் அறிவான மெய்ஞ்ஞானம் எனும் பெயரைப் பெற்றது.
ஆறறிவு அனைவருக்கும் தெரியும்.
ஏழாம் அறிவு, எட்டாம் அறிவெவ்வாம் இதற்கு முன் பேசப்பட்டதா? எமக்குத் தெரியவில்லை. இப்பொழுது ஏழாம் அறிவு என திரைப்படம் கூட வந்திருக்கிறது. ஆனால் புதுமைகள் சொன்ன பூரணரான சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் இன்றைக்கு ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே தங்கள் ஞானப்பாடலில் ஏழாம் அறிவைப்பற்றி, எட்டாம் அறிவைப் பற்றியயல்லாம் அழகாகப் பாடிவிட்டார்கள். இதோ கேளுங்கள்.
ஆறறிவில் மேலான
ஏழான நல்லறிவு
மாறாது கலந்துறையும் நானே
ஏழிலுமே மேலான
எட்டான மெய்ஞ்ஞானம்
ஆழக்கலந்தகலா நானே. (இறையருட்பா)
ஏழாம் அறிவைக் குறிப்பிட்ட செய்குநாயகம் அவர்கள் அது என்ன என்பதையும் விளக்கப் படுத்தியுள்ளார்கள். ஏழாம் அறிவை அவர்கள் திருமறையில் கூறப்பட்ட பயான் எனும் விளக்க அறிவு என விளக்குகிறார்கள்.
குர்ஆன் ரீஃபில் அர்ரஹ்மான் சூராவில் கலகல் இன்ஸான வஅல்லமஹுல் பயான் அல்லாஹ் மனிதனைப் படைத்தான். மேலும் அவனுக்கு பயான் எனும் விளக்க அறிவைக் கொடுத்தான் என இறைவன் அருளுகிறான்.
இந்த ஆயத்தில் ஓர் ஆழமான நுட்பமும் மறைந்திருக்கிறது. அதாவது;
இன்ஸானைப் படைத்தான் எனும்போது ஆறறிவுள்ள மனிதனைப் படைத்தான் என்பதும், பயானைக் கற்றுக் கொடுத்தான் எனும்போது அது ஏழாவது அறிவைச் சுட்டிக் காட்டுவதையும் உணர முடிகிறது.
ஆறறிவு முதிர்ச்சி பெறும்போது ஏழாம் அறிவும் ஏழாம் அறிவு பூரணப்படும்போது எட்டான மெய்ஞ்ஞானமும் எழுகிறது என்பதும் விளங்குகிறது.
மேலே சுட்டப்பட்ட பாடல் ஆதியிலே சூனியமாய் எனத் தொடங்கும் பாடலில் வருகிறது. இப்பாடலுக்கு மெட்டமைத்து மஜ்லிஸ்களில் பாடும்போது ஆழக்கலந்தகலா என்பதன் பொருள் ஆழக்கலந் கலை என நான் நினைத்துக் கொண்டு பாடுவதை கவனித்த சங்கைமிகு ஷைகுநாயகம் அவர்கள் அதற்குப் பொருள் ஆழக் கலந்து அகலாதிருப்பவன் நானே என்பதாகும் எனத் திருத்தினார்கள்.