ஏகாந்த விடி விளக்கம்!
ஆஷிகுல் கலீல் B.com., திருச்சி
கலீல்அவ்னை நாம்அழைத்தால்
கதிமோட்சம் கிடைத்துவிடும்
கலீல் நாதர் பாதங்களே - உள்ளக்
கறை நீக்கும் போதங்களாம் !! (கலீல்)
உள்ளத்தில் அவர் உருவம்
உதித்தாலே மோனமதாம் !
எண்ணத்தில் அவர் நினைப்போ
ஏகாந்த விடி விளக்காம் ! (கலீல்)
ஒன்றென்னும் உயர் ஞானம்
வென்றெடுக்க வாரீரோ ...
என்றென்றும் நபி நேசம்
கண்குளிரக் காணீரோ ...! (கலீல்)
ஹக்கென்றும் கல்கென்றும்
பிரிவில்லை இனி நமக்கு !
கடல் என்றும் அலை என்றும்
இரண்டுண்டோ நீ கூறு ? (கலீல்)
தெளிவாக ஞானமதை
தெரிந்தாலே நீ மனிதன் !
ஞானம் இல்லை என்று சொன்னால்
ஐயம் இல்லை நீ மிருகம் ! (கலீல்)
எந்நாளும் கலீல் நாதர்
எம்முயிரைக் காப்பாரே !
எங்கேனும் நானிருந்தால்
எம்முடனே வாழ்வாரே ! (கலீல்)
(அல்லாவை நாம் தொழுதால்....எனும் இசை.)