• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012 » Oct 2012 »  கலீல் அவ்ன் மெளலானாநாயகம் அமுத மொழிகள்

ஆசிரியர்

ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா

                    அல்ஹா´மிய் நாயகம் அவர்கள்

 

என்றலு முமரு மீங்கண்

                                                இறைநபி தாமும் யானும்

                                தென்றலுங் குணமு மென்னத்

                                                திருவிறை கருணை யாலே

                                நன்றுயிர் வாழ்கி றோமே

                                                நலமொடு வதிகி றோமே

                                என்றுயர் கிளவி தன்னை

                                                எழிலுறக் கூறி னாரே.

 

கொண்டு கூட்டு:

                என்றலும் உமரும் ஈங்கண்இறை நபிதாமும்  யானும் தென்றலும் குணமும்

                என்னத்  திரு இறை கருணை ஆலே   நன்று   உயிர் வாழ்கிறோமே.       நலம்            ஒடுவதிகி      றோமேஎன்று உயர் கிளவி தன்னை எழில் உறக் கூறினாரே.

பொருள் : 

                நபியுளாரா? உமர் உளாரா? என்று ஸுப்யான் கேட்டலும்உமர் (ரலி) அவர்கள் இறைவனின் தூதரவர்களும் நானும் தென்றற் காற்றும் அதன் இதமானதன்மையும் போல் திருவிறை கருணையாலே நன்று உயிரோடு வாழ்கிறோம்.  நலமோடு தங்கியிருக்கிறோம் என்று உயர்வானசொற்கள் கொண்டு அழகுறக் கூறினார்கள்.