அமிழ்தினும் அமிழ்தான
உயிரினும் உயிரான - இனிதினும் இனிதான
கனிவிலும் கனிவான - கலீல்அவ்ன் நாயகம் வந்தார்கள்
அமிழ்தினும் அமிழ்தான - அரிதினும் அரிதான
அருமை குரு நாதர் அவனியில் உதித்தார்கள்!
அன்பு மிக நிறைந்த - பண்பும் மிக நிறைந்த
பயகம்பர் நபிபேரர் - பாரினில் வந்தார்கள்
நேசம் மிக நிறைந்தார் - பாசம் மிக நிறைந்தார்
வாச மலர்ப்பாதம் - துபை தனில் பதித்தார்கள்!
உயர்விலும் உயர்வான - சிறப்பினும் சிறப்பான
சீரிய குருநாதர் கலீல் அவ்ன் நம்பெருமான்
சங்கை சீர் நபியின் - சீரிய தெளஹீதை
ஷரீஅத் நெறிமுறையில் - சீராய் உரைத்தார்கள்!
அருவிலும் அருவான - கருவினில் திருவான
தெளிவிலும் தெளிவான - சங்கைகுருநாதர் திருவருள் புரிந்தார்கள்
மனிதனின் மருள்நீக்கி - இதயத்தின் இருள்நீக்கி
உள்ளத்தில் ஒளியேற்றி - உண்மை உரைத்தார்கள்!
ஹக்காய் உரைத்தீர்கள் - ஹக்கை உரைத்தீர்கள்
ஹக்கை அறிந்தீர்கள் - ஹக்காய் ஆனீர்கள்
கல்குகள் எல்லாமே ஹக்கே என்றீர்கள்
படைப்புகள் வேறல்ல - படைத்தவன் வேறல்ல
பாரினில் பார்ப்பதெல்லாம் பரம்பொருள் தோற்றம் என்றீர்
பூமிக்குள் பிரபஞ்சமா? - பிரபஞ்சத்திற்குள் பூமியா? தங்கள் தரிசனத்தில் எழுந்த கேள்வி
பிரபஞ்சத்திற்குள் நாங்களா?
அதாவது - எங்கள் ஷெய்கு நாதர் இதயத்தில் நாங்கள்!
எங்களுக்குள் பிரபஞ்சமா? - எங்கள் இதயத்தில் தாங்கள்
என்றே வியந்தோம் - தங்கள் தரிசனத்தில்
பேரிறையாம் பெரும்தொகுதி - நாம் அதிலோ சிறு பகுதி
பகுதி - விகுதி - பாராமல் பரம்பொருளை அறியச் சொன்னீர்கள்!
உண்மையின் உருவே நீங்கள்
உள்ளமையின் வடிவே தாங்கள்
அல்லாஹ் வோ தேன் என்றால் - அவன் ரசூலோ
ரோஜாமலர் என்றோ - இரண்டும் கலந்த அமிழ்தமான
“குல்கந்து” தான் குருவான - தாங்கள்
எங்கள் தாய்க்கும் தாயல்லவோ - தந்தைக்கும் தந்தையல்லவோ
தாய்தந்தைக்கும் மேலான தனிநிகரில்லா சொந்தம் அல்லவோ -
குரு - பந்தம் அல்லவோ
சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்
என்பார்கள் தாம் - அரசியல் வாதிகள்
அறிந்ததைச் சொன்னீர்கள்
சொன்னதை அறிந்துள்ளீர்கள் - கண்டோம் இதை நாங்கள் தாம்
ஒன்றே இறை என்றே இதை - இன்றே அறி -
நன்றே தெளி - என்பதே தங்கள் - தாரக மந்திரம்
திருக்கலிமா - திருமந்திரம் - திருவருள் வாக்கு -
பணிந்தோம் உங்கள் பதம்
அறிந்தோம் இறை விளக்கம்
அடைவோமே இறை ஞானம்
ஆமீன் - ஆமீன் - யாரப்பல் ஆலமீன்
A. நஜ்முத்தீன் ஹக்கிய்யுல் காதிரி, மதுக்கூர் (கேம்ப், துபை)