• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Sep 2011   »  நல்லவர்கள் நாடும் பொருளே!


நல்லவர்கள் நாடும் பொருளே!

ஆலிம்புலவர் எஸ், ஹுஸைன் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மன்பயீ

 

நல்லவர்கள் நாடும் பொருளே - நபி

நாயகத்தின் இல்ல விருந்தே

அறிவினை விரிவாக்கி எங்கள் அகங்களை தெளிவாக்கும்    (நல்லவர்கள்)

உண்மைதன்னைத் தேடும் உள்ளம் எங்கெங்கோ இருந்தது

உம்மைக் கண்ட பின்னே உம் அணியில் இணைந்தது

பரிசுத்தமாய் நடந்தோர் உம்பார்வைக்கு இலக்கானார்.

நேர்மை கொண்டே ரெல்லாம் - உம்

நிழலுக்குள் விரைந்தே நுழைந்தார்.    (நல்லவர்கள்)

 

பெருமான் நபியின் நேசம் நெஞ்சில் சுமந்தோர் யாவரும்

அறியாப்புறத்தில் கவர்ந்தே உம் அன்பில் ஒதுங்கினார்

அறிஞர்கள் அறிவுபெற்றார் படித்தவர் படித்துக்கொண்டார்

புலவர் கவிஞர் புகழ்ந்தார் - உம்

பூரணத்தின் முன் பணிந்தார்.    (நல்லவர்கள்)

 

மகிழ்ச்சி என்னும் சொல்லே தங்கள் மந்திரமானது

கவலை என்ற சொல்லே இங்கு காணாய்போனது

ஒரு சொல்லில் புது வாழ்க்கை உயிருக்குள் மறுமலர்ச்சி

உயர்வை உயர்வை நோக்கி - எம்

உள்ளமையில் பெரும் புரட்சி.    (நல்லவர்கள்)

 

அலியார் வந்த வழியார் புனித வலிமார் தம்மிலே

எழிலார் எங்கள் கலீலார் மிகத் தெளிவார் தன்னிலே

மரபுக்கு பெருமை தந்தார் மனதுக்கு சுகமளித்தார்

காலம் போற்றும் குத்பாய் - வருங்

காலமும் வாழ்த்தும் குருவாய்!    (நல்லவர்கள்)

 

இசை: உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்