உமர் ( ரலி ) புராணம்
ஆசிரியர்
ஜமாலிய்யாஸய்யிதுகலீல்அவ்ன்மெளலானா
அல்ஹாஷிமிய்நாயகம்அவர்கள்
முதலாவது உதய காண்டம்
தித்திக்காதுதீந்நறையதுவும்
எத்தகைக்கனியுமின்பம்பயக்கா
சித்தனவனின்றிருநினைப்பல்லால்
நித்தியனவனைநிதம்வாழ்த்துதுமே.
கொண்டுகூட்டு :
சித்தன்அவனின்திருநினைப்புஅல்லால்தீம்நறைஅதுவும்தித்திக்காது.எத்தகைகனியும்இன்பம்பயக்கா.ஆகலின்நித்தியன்அவனைநிதம்வாழ்த்துதுமே.
பொருள் :
சித்தனாகியபலபக்குவங்களையுடையகடவுளின்திருவாகியநினைப்பல்லால்இனிமையானகள்ளும்(தேனும்)இனிக்காது.எத்தன்மையகனிகளும்இனிமைபயக்காது.ஆகலின்நித்தியனானஇறைவனைஎன்றென்றும்வாழ்த்துவோமே.
குறிப்பு :
தித்தித்தல்:இனித்தல்.தீம்:இனிமையான.நறை:கள்,தேன்.திரு:தெய்வத்தன்மை,செல்வம்,சிறப்பு,பொலிவு,அழகு.பயத்தல்:கொடுத்தல்.சித்தன்:பக்குவங்களையுடையவன்.