உமர் ( ரலி ) புராணம்
ஆசிரியர்
ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா
அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்
முதலாவதுஉதய காண்டம்
காட்சியாகிக் காட்சிப் பொருளாய்ச்
சாட்சியாகித் தன்னி னின்று
ஆட்சிசெய்யு மருவ னீயே
மாட்சிமையுடை மறையோற் குப்புகழ்
கொண்டுகூட்டு :
காட்சி ஆகி காட்சிப்பொருள் ஆய் சாட்சி ஆகி தன்னில் நின்று ஆட்சி செய்யும் அருவன் நீயே மாட்சிமை உடைய மறையோனாகிய உனக்கே எல்லாம் புகழும் .
பொருள் :
காட்சியாகிக் காட்சியை உண்டு பண்ணும் காட்சிப் பொருளாகி அது யானே என்னும் சாட்சியாகித் தானாகித் தானே தன்னில் நின்று ஆட்சி புரியும் உருவற்ற அருவன் நீயே . இத்தகை மாட்சிமை யுடைய மறையோனாகிய உனக்கே புகழ் .
குறிப்பு :
தானே தான் ஆட்சியாளன் என்பதற்குத் தானே சாட்சியாய் நிற்கின்றனன். அரு : அருவமானவன். மாட்சிமை : மாண்பு. மறையோன் : மறையையுடையோன் . அனைத்திலும்புகுந்து கலந்து மறைந்துள்ளவன் .
( இறைவாழ்த்துப் படலம் முற்றும் )
( பாடல்கள் 22)