ஜமாலிய்யாதோட்டத்தில் கொய்த மலர்
ஆதி எல்லாப் பொருள்களுக்கும் மூலமானது. மூலாதாரமானது. அருவாயும் உருவாயும் விளங்கும் அனைத்தும் உற்பத்தியான உற்பத்தியாகிக் கொண்டிருக்கும் உற்பத்தியாகவிருக்கும் மூலாதாரமே ஆதி.
பரிசுத்த மெய்ஞ்ஞானமே ஹக்கைக் காட்டுவதற்குள்ள ஒரே வழியாகும். வேறெந்த வழியிலும் சென்று இறைவனை அடையவே முடியாது .
அல்லாஹ்வை தனித்தனியாகப் பிரித்து அறிவதை விட முழுமையாக அறிவதுதான் முக்கியம் .
செல்ல முடியாத இடத்திற்கு அறிவை செலுத்திப் பார்த்துக் கொள்ளலாம் .அறிவுக்குத்தான் முக்கிய இடம் .
நாம் சாப்பிடும்போதும் நாம் நினைக்கும் போதும் தூங்கும் போதும் பரிபூரணக் கருத்தைக்கொள்ள வேண்டும் .
உண்ணும் போதும் உறங்கும் போதும் அந்தப்பரிபூரணக் கருத்தை கைக்கொள்ளும் போது அந்த பரிபூரண தஜல்லி நம்மிலே வெளியாகும் .எனவே நாம் எதைச் செய்தாலும் அவன் செய்ததாகவே நினைக்க வேண்டும். அது நாளடைவில் ஹக்கு செய்ததாகவே மாறிவிடும் . நமது முழுத்தோற்றமும் உருவமும் எண்ணமும் அதுவாகவே மாறிவிடும் .
ஞானம் என்பது அல்லாஹ்வை அறிவது. ஞானத்தின் மூலம் கலிமாவாகும். கலிமா என்பது நம்மிலும் நம்மிலிருந்து பரந்து விரிந்து நிலம், நீர், தாவரம், மரம், மட்டை, வானம், பூமி அண்டசராசரங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ளது. பரிபூரணமாகவியாபித்துள்ளது .
பரிபூரண தெளஹீது இலங்கும்; இலங்குகின்ற எம் இஸ்லாமிய சமூகத்தில் தெளஹீதின் அற்ப அறிவாவது இல்லையே எனக் கவலை கொள்கிறோம். வருங்காலத்தில் இஸ்லாத்தின் கதி என்னவாகுமோ? நல்அருளை ஹக்கு அருள வேண்டும் .
ஷைகிடம் அதிகமான அன்பு கொள்ள வேண்டும். (ஃபனாஃபிஷ்ஷைக்) ஷைகிடம் இரண்டறக்கலத்தல் தான் தவ்ஹீதின் முதலாவது படியாகும். அதற்குப்பிறகு தான் ஹக்கில் இரண்டறக்கலப்பது. எனவே ஷைகிடத்தில் உரிய அன்பும் மரியாதையும் பயபக்தியும் இருந்தால் தான் முரீதின் வாழ்வில் சிறப்பு உண்டாகும் .
எல்லா ஞானிகளுக்கும் வலிமார்களுக்கும் நாமே தலைவராய் இருக்கிறோம். அவர்கள்( ஞானிகள் ) தம்மைஅறியாத வகையில் எம்மாலே இயக்கப்படுகிறார்கள் .