எனது வருகையால் எனது காலம் ஜொலித்தது !
- நிச்சயமாக நான் அஹ்மதிய்ய அருத்த (தாற்பரிய) ங்கொண்ட அஹ்மதீயாக இருக்கிறேன். நான் திட்டமாக அஹ்மதிய்யத்தான அஹதிய்ய (ஏகத்துவ) த்தைக்கொண்ட அஹதா (ஒருவரா) கவும் இருக்கிறேன் .
- நிச்சயமாக நான் அஹ்மதிய்ய சைய்யிதாகி யரஸூல் நாயகம் (ஸல்) அவர்களின் திருப்பேரராக இருக்கிறேன். திட்டமாக நான் அஹ்மதிய்ய சைய்யிதாகிய ரஸூல் நாயகம் (ஸல்) அவர்களின் வாரிசாகவும் இருக்கிறேன் .
- என்னுடைய கொடிகள் செழிப்பான மிக உயர்ந்த மலைகளில் பறந்தன. அஹ்மதிய்யசங்கை கொண்டு (வஹ்தத்தின்) ஏகத்துவத்தின் அடையாளங்கள் எனக்கு இருக்கின்றன .
- நான் காமிலான ஷைகாகவும் தலைவராகவும் நேர்வழி காட்டுபவராகவும் இருக்கிறேன். நான் அஹ்மதிய்ய உள்ளமையின் உயரிய தகுதிகளை பிரச்சாரம் செய்கிறவராகவும் உயரியதரங்களளவில் அழைக்கிறவராகவும் இருக்கிறேன். (அல்லதுநான் அஹ்மதிய்ய உள்ளமையின் உயரிய தரங்களளவில் அழைக்கிறவராகவும் இருக்கிறேன் .)
- எனது வருகையால் எனது காலம் ஜொலித்தது. வணக்கம் (நற்செயல்களைக்) கொண்டு எனது நேரம் மணம்பெற்றது. அஹ்மதிய்ய அருள்களால் எல்லா நேரங்களிலும் எனது அறிவு நறுமணம் வீசியது .
- தேவை (விருப்பங்)களுக்காக எம்மை (எம்பக்கம்) நாடுகிறவர்களுக்கு நிச்சயமாக நான் கிப்லாவாக (முன்னோக்கும்தானமாக) இருக்கிறேன் . "கலீல் '' என்னும் நாமத்தை அழைக்கிறவர் அஹ்மதிய்யபேற்றை (அதிருஷ்டத்தை) அடைந்தவராவார் .
- என்னைப் பின்பற்றியவர்கள் இம்மையிலும் மறுமையிலும் அஹ்மதிய்யாவைக் கொண்டு பேற்றினையும் உயர்தரங்களையும் பாக்கியத்தையும் பெற்றுக் கொள்வர்.
- கஷ்டத்தின் நெருக்கடியில் ""யாகலீல்அவ்ன்'' என உதவி தேடி அழைப்பவருக்கு அஹ்மதிய்யாவைக் கொண்டு அவருடைய உதவி வந்தடையும் .
சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் அருள் வாரிதாத்தான கஸீதத்துல் அஹ்மதிய்யா நூலிலிருந்து ....)