புனித பர்ஸன்ஜிய் மௌலிது மஜ்லிஸ், திருச்சி. {பிறை : 19, 20, 21 & 22}

04.02.13 04:33 AM

மதி பிளத்தல்

மதிபி ளந்த  மாநபி
      மண்ணில்   வந்த  மாமதி
பதியின் மிக்க மாபதி
       மறைகொ   ணர்ந்த   சீர்நபி.

  - அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்கள்.


உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்  புகழ்ந்தோதும் புனித பர்ஸன்ஜிய் மௌலித் மஜ்லிஸ் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளையின் சார்பாக ரபீஉல் அவ்வல்  பிறை 19-இல் 31.01.2013 (வியாழக்கிழமை) மாலை மௌலவி. N. முஹம்மது ரபீஉத்தீன்  ஆலிம் நூரி ஹக்கிய்யுல்  காதிரிய் அவர்கள் இல்லத்திலும் ரபீஉல் அவ்வல்  பிறை 20-இல் 01.02.2013 (வெள்ளிக்கிழமை) மாலை பேராசிரியர் கான் முஹம்மது ஹக்கிய்யுல்  காதிரிய் அவர்கள் இல்லத்திலும் ரபீஉல் அவ்வல்  பிறை 21-இல் 02.02.2013 (சனிக்கிழமை) மாலை ஜனாப். ராஜா முஹம்மது ஹக்கிய்யுல்  காதிரிய் அவர்கள் இல்லத்திலும் ரபீஉல் அவ்வல்  பிறை 22-இல் 03.02.2013 (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஜனாப். பக்ருத்தீன் அலி அஹமது  ஹக்கிய்யுல்  காதிரிய் அவர்கள் இல்லத்திலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மஜ்லிஸில் திருச்சியைச் சேர்ந்த முரீதுப் பிள்ளைகளும் - அஹ்பாபுகளும் கலந்து கொண்டார்கள்.  ஒவ்வொரு மஜ்லிஸிலும் தப்ரூக்கும் - கந்தூரி உணவும் வழங்கப்பட்டது.

"முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சங்கைப்படுத்துவதற்காகவும் அவர்களுடைய பெயரைப் பாதுகாப்பதற்காகவும் கீர்த்திமிக்க அவர்களின் மூதாதையரை அவர்களுடைய இறைவன் பாதுகாத்தான்".

  [- சங்கைக்குரிய வாப்பா நாயகமவர்கள் மொழி பெயர்த்த பர்ஸன்ஜிய் மௌலிது தர்ஜுமாவிலிருந்து]


ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.

emsabai.ansari