மதி பிளத்தல்
மதிபி ளந்த மாநபி
மண்ணில் வந்த மாமதி
பதியின் மிக்க மாபதி
மறைகொ ணர்ந்த சீர்நபி.
- அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்கள்.
உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்தோதும் புனித பர்ஸன்ஜிய் மௌலித் மஜ்லிஸ் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளையின் சார்பாக ரபீஉல் அவ்வல் பிறை 19-இல் 31.01.2013 (வியாழக்கிழமை) மாலை மௌலவி. N. முஹம்மது ரபீஉத்தீன் ஆலிம் நூரி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்திலும் ரபீஉல் அவ்வல் பிறை 20-இல் 01.02.2013 (வெள்ளிக்கிழமை) மாலை பேராசிரியர் கான் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்திலும் ரபீஉல் அவ்வல் பிறை 21-இல் 02.02.2013 (சனிக்கிழமை) மாலை ஜனாப். ராஜா முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்திலும் ரபீஉல் அவ்வல் பிறை 22-இல் 03.02.2013 (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஜனாப். பக்ருத்தீன் அலி அஹமது ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்திலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மஜ்லிஸில் திருச்சியைச் சேர்ந்த முரீதுப் பிள்ளைகளும் - அஹ்பாபுகளும் கலந்து கொண்டார்











"முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சங்கைப்படுத்துவதற்காகவும் அவர்களுடைய பெயரைப் பாதுகாப்பதற்காகவும் கீர்த்திமிக்க அவர்களின் மூதாதையரை அவர்களுடைய இறைவன் பாதுகாத்தான்".
[- சங்கைக்குரிய வாப்பா நாயகமவர்கள் மொழி பெயர்த்த பர்ஸன்ஜிய் மௌலிது தர்ஜுமாவிலிருந்து]
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.