கதிரவன் வெளியாதல்
அத்த மித்த கதிரவ
னான சுத்த சோதியை
வித்தை யாக விண்ணுயர்
மீட்டி வைத்தார் மாநபி.
- அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்கள்.
உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்தோதும் புனித பர்ஸன்ஜிய் மௌலித் மஜ்லிஸ் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளையின் சார்பாக ரபீஉல் அவ்வல் பிறை 23-இல் 04.02.2013 (திங்கட்கிழமை) மாலை ஜனாப். நஸ்ருத்தீன் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மஜ்லிஸில் திருச்சியைச் சேர்ந்த முரீதுப் பிள்ளைகளும் - அஹ்பாபுகளும் கலந்து கொண்டார்



"மட்டற்ற மறைவான எல்லா இரகசியங்களையும் படைப்பினங்களுக்குத் திறந்து வெளிப்படுத்துவதற்காக ரஸூல்மார்களின் (தூதர்களின்) முடிவானவர்களாக நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைத் தேர்ந்தெடுத்தான்".
[- சங்கைக்குரிய வாப்பா நாயகமவர்கள் மொழி பெயர்த்த பர்ஸன்ஜிய் மௌலிது தர்ஜுமாவிலிருந்து]
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.