நாடு வளம் பெறல்
நபிபி றந்த போதினில்
நலங்கு றைந்த நாடிது
தபமொ ழிந்து வளமிகத்
தண்மை கொண்டொ ளிர்த்ததே.
வரண்டி ருந்த வாறுகள்
வாரி நீர்நி றைந்தென
இருக ரைபு ரண்டு நீர்
எங்கு மோட வாயதே.
[வாரி : கடல்]
- அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்கள்.
உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்தோதும் புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளையின் சார்பாக ரபீஉல் அவ்வல் பிறை 24-இல் 05.02.2013 (செவ்வாய்க்கிழமை) மாலை அல்ஹாஜ். K. B. காதர் உசேன் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்திலும் - ரபீஉல் அவ்வல் பிறை 25-இல் 05.02.2013 (புதன்கிழமை) மாலை புனித பர்ஸன்ஜிய் மௌலித் மஜ்லிஸ் ஜனாப். S. முஹம்மது அனஸ் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்திலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மஜ்லிஸில் திருச்சியைச் சேர்ந்த முரீதுப் பிள்ளைகளும் - அஹ்பாபுகளும் கலந்து கொண்டார்









"அல்லாஹ்வின் ரஸூலாகிய தெளித்தெடுக்கப்பட்ட தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உதவியாளர்களின் தரமோ நாம் அறிந்திருக்கிறோமே அதைவிட மிக உயர்ந்தும் மிகப் பெருமைக்குரியதுமாகும்".
[- சங்கைக்குரிய வாப்பா நாயகமவர்கள் மொழி பெயர்த்த பர்ஸன்ஜிய் மௌலிது தர்ஜுமாவிலிருந்து]
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.