புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், திருச்சி. {பிறை : 13}

26.01.13 07:42 AM


பார்வை   யற்ற   கண்ணினிற்
      பதிக    ணாதர்    துப்பியே
கூர்மை   யான   பார்வையைக்
      கூட்டி வைத்தா ரெம்நபி.

[பதிகணாதர் : பதிகள் + நாதர்]

- அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்கள்.

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளை சார்பில் -திருச்சியில்
இன்ஜீனியர் காஜா முஹியுத்தீன் அவர்கள் இல்லத்தில் 
உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க
ளைப்  புகழ்ந்தோதும் புனித சுப்ஹான மௌலித் வெகு விமரிசையாக நடைபெற்றது. மஜ்லிஸில் திருச்சியைச் சேர்ந்த முரீதுப் பிள்ளைகளும் - அஹ்பாபுகளும் கலந்து கொண்டார்கள். விழாவின் நிறைவாக கந்தூரி உணவு வழங்கப்பட்டது.


* உயர்வுமிக்க கருணைகளும் ஈடேற்றமும் அல்லாஹ்வின் ரஸூலுக்கும் அவர்களுடைய சந்ததிகளுக்குமாகும்.
** அவர்களின் உதயத்திலிருந்து காலை தோன்றியது. அவர்களின் நிறைவிலிருந்து இரவு இருண்டது. (பதுறு மௌலிது)

ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.

emsabai.ansari