புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், திருச்சி. பிறை : 2

15.01.13 07:38 AM

மதிபி  ளந்த  மாநபி
     மண்ணில்   வந்த  மாமதி
பதியின் மிக்க  மாபதி
     மறைகொ ணர்ந்த   சீர்நபி
- யாம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உதய மாதமான ரபீஉல் அவ்வல் மாதம் முழுதும் சுப்ஹான மௌலிது மஜ்லிஸ் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை மூலம் எல்லா ஊர்களிலும் நடைபெறுவது போல திருச்சியிலும் கொண்டாடபடுகிறது. நேற்று (14.01.2013) திங்கட்கிழமை மாலை (பிறை 2) திருச்சி கிளையின் அவை தலைவர் கிப்லா ஹள்ரத் மௌலவி N . அப்துஸ்ஸலாம் ஆலிம் அவர்கள் இல்லத்தில் ஸுப்ஹான மௌலித் மஜ்லிஸ் நடைபெற்றது. மஜ்லிஸில் திரளான ஆத்ம சகோதரர்களும் முஹிப்பீன்களும் கலந்து கொண்டார்கள் நிறைவாக கந்தூரி உணவு வழங்கப்பட்டது.


" இறைவனே எல்லா திடுக்கங்களிலிருந்தும் சோதனைகளிலிருந்தும்  எதைக் கொண்டு நாம் பாதுகாப்படைகிறோமோ அத்தகைய ஸலவாத்தெனும் கருணையை எங்கள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், எங்கள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குடும்பத்தார் மீதும் கூறுவாயாக" (பதுறு மௌலிது)

ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 
ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்  யா  ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்

emsabai.ansari