• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai»   2014   »   Jan2014   »     திருமறைப் ‍பக்கம்

திருமறைப் ‍பக்கம் 


அல்லாஹ்வே புகழும் அண்ணலார்


முஹம்மது உமர் கைய்யாம் , ஜாமிஆ யாஸீன் மாணவர் .


 

  1. நபியே ! நிச்சயமாக நீங்கள் நற்குணத்தில் இருக்கின்றீர்கள் .   (68:04)

  2. நபியே ! உங்கள் மகிமையை நாம் உயர்த்தியுள்ளோம் .   (94:4) 
  3. நபியே ! அகிலத்தாருக்கு அருட்கொடையாகவே உங்களை அனுப்பியுள்ளோம் .   (21:07) 
  4. அல்லாஹ் நபியவர்களை அனுப்பியதன் மூலம் மூஃமின்களின் மீது அருள் புரிந்துள்ளான் .   (3:164)
  5. அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் நபியவர்களின் மீது ஸலவாத் சொல்கின்றனர் . ஈமான் கொண்டவர்களே நீங்களும் அவர்கள் மீது   ஸலவாத்து ஓதி   ஸலாமும் கூறி வாருங்கள் (33:56)
  6. நபியவர்கள் முஃமின்களின் உயிரைவிடவும் மேலானவர்கள் . (7:157)
  7. நபியவர்கள் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரியாக இருக்கிறார்கள் .   (33:21)
  8. அல்லாஹ்வையும் அவனது ரஸூலையும் நம்பிக்கை கொண்டு அவர்களை கண்ணியப்படுத்துங்கள் . இன்னும் காலையிலும் மாலையிலும் அவர்களை துதி செய்து வாருங்கள் .   (48:09)

    இவ்வாறெல்லாம்
      நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களின் குணங்களைப் புகழ்ந்த   இறைவன் ,மீண்டும் தனது ஹபீபான   அவர்களின் அங்கங்களைப் புகழ்கிறான் .

    1.   
    அவர்களின் விழிகளைப் பற்றி = 20:131 - லும்

    2.  
    அவர்களின் திருமுகத்தைப் பற்றி = 2:144 - லும்

    3.
    அவர்களின் திருப்பார்வையைப் பற்றி = 53:17 - லும்   

    4.
    அவர்களின் உள்ளத்தைப் பற்றி = 25:32 - லும் , 53:11 - லும் , 2:97 - லும் கூறுகிறான் .


    அல்லாஹ்வை விட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களை அதிகமாகப் புகழ்வது மனிதர்களால் முடியாத ஒன்றாகும் .

    எனினும்
    பெருமானாரைப் புகழ்வது அல்லாஹ்வின் சுன்னத்தாக இருப்பதால் அல்லாஹ்வின் சுன்னத்தை அடியார்களாகிய நாம் அடி பிசகாமல் பின்பற்றுவோம் !!

j