• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai »     2014    »    Jan 2014    »    ஹதீஷ்  பக்கம் 


ஹதீஷ் பக்கம்


ஸலவாத்து சொல்வேமே! சொர்க்கம் செல்வோமே!


பள்ளி வாசலுக்குள் நுழையும் போதும் , பள்ளியை விட்டு வெளிவரும் போதும் ஸலவாத்   ஓதுவது இறைவனை மகிழ்வூட்டும் என்ற நபிமொழியை அன்னை ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள் .


நூருல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது நாள்தோறும் நூறு ஸலவாத்துக்கள் நாம் ஓதினால் மறுமையின்   எழுபது தேவைகளையும் , இம்மையின் முப்பது தேவைகளையும் அல்லாஹ் நமக்கு நிறைவேற்றித் தருவான் - இந்த ஹதீஸை ஹள்ரத் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் .


என்மீது நீங்கள் சொல்லும் ஸலவாத் , துஆக்களைப் பாதுகாக்கும் .   பாதுகாப்பாளனின் திருப் பொருத்தத்தைப் பெற்றுத் தரும் .   வணக்கங்களைத் தூய்மை செய்து அவற்றை அதிகப்படுத்தும் ( க் ) காத்தாகவும் ஆகிவிடும் .


ஸலவாத் ஏழைகளின் சத ( க் ) காவாகும் என்ற ஹதீஸை ஹள்ரத் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , ஹள்ரத் அனஸ்   ( ரளி )ஆகியோர் அறிவிக்கிறார்கள் .


என்மீது பத்துத்தடவை ஸலவாத்துச் சொல்பவர் மீது அல்லாஹ் நூறு தடவை ஸலவாத்துச் சொல்கிறான் .   நூறு தடவை ஸலவாத்துச் சொல்பவர் மீது அல்லாஹ் ஆயிரம்   தடவை ஸலவாத்து சொல்கிறான் .   அன்பும் ஆர்வமும் மிகைக்க அதிகமதிகம் ஸலவாத்துச் சொல்பவருக்கு ­ ஃபாஅத்தும் , சாட்சியும் கூறும் நிலையில் நான் இருப்பேன் என்று உண்மை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்   உறுதி தந்ததாக ஹள்ரத் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் .


வைகறை முதல் அஸ்தமனம்வரை எழுபதாயிரம் வானவர்களும் இரவுமுதல் விடியும் வரை எழுபதாயிரம் வானவர்களும் வள்ளல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ளாவைச்சுற்றிக் குழுமி நின்று ஸலவாத் ஓதிக்கொண்டே இருப்பார்கள் .   உலகின் இறுதிநாள்வரை தவறாமல் இது நடந்துகொண்டே இருக்கும் என அன்னை ஆயிஷா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் .