• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai   »     2014     »     Jan2014     » உமர் (ரலி) புராணம்


உமர் (ரலி) புராணம்


ஆசிரியர் ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹா ´ மிய் நாயகம் அவர்கள்


அகழ்யுத்தம்


பரியதி வீர னான

                படுவம் ரிப்னு வுத்து

                        அரியயனத் திகழு மலியால்

                                  அழிவுறக் கொல்லப் பட்டான்
           தரியலர் சுற்றி நின்று

                    சரமது மாரி யயன்ன

                          சுரிகையோ டெய்து நின்றார்

                                                துயரமே கொளற்கென் கொல்லே .

கொண்டு கூட்டு :

 பரி அதி வீரனான அம்ரிபுனு உத்து ( என்பான் ) அரியயனத் திகழும் அலி ( ரலி ) அவர்களால் அழிவு உறக் கொல்லப்பட்டான் .   தரியலர் சுற்றி நின்று மாரியயன்ன சரமதுடன் சுரிகையும் எய்து நின்றார் ( நாயகம் அவர்கள் ) துயரம் கொள்ளுமாறு என்க


பொருள் :  

குதிரை யுத்தத்தில் பெரிய வீரனான கொடிய அம்ரிபுனு உத்து என்பவன் சிங்கம் போல் காட்சி கொடுக்கும் அலி ( ரலி )   அவர்களால் அழிந்து போகுமாறு கொல்லப்பட்டான் .   பகைவர்கள் சுற்றி நின்று   மழை போல அம்புகளுடன் உடைவாள்கள் , கத்திகள் போன்றவைகளையும் வீசி நின்றார்கள் .   நாயகம் அவர்கள் துன்பம் கொள்ளுமாறு என்க .


குறிப்பு :

 பரி : குதிரை . அதி : அதிகம் , மிக்க . படு : கொடிய . அரி : சிங்கம் . தரியலர் : பகைவர்   சரம் : அம்பு . மாரி : மழை . சுரிகை : உடைவாள் , கத்தி முதலியன . துயரம் : துன்பம் .