ஜமாலிய்யா தோட்டத்தில் கொய்த மலர்
இறைகேட்டது : நீர் இப்படியே பரிபூரணமாய் இருக்க விரும்பினீரா ?
யான் விடுத்தது : இறைவா , ஆம் , அப்படியே இருப்பதோடு என்னை வெளிக்கொணரவும்விரும்பினேன் .
இறைகேட்டது : அப்போது பரிபூரணத்திற்கு என்னவானது ?
யான் விடுத்தது : இறைவா அப்போது பரிபூரணம் சலனமடையத் தொடங்கிற்று.
இறைகேட்டது : சலனமென்பதென்ன ?
யான் விடுத்தது : இறைவா , அது தோன்றவிருக்கும் நிலை.
இறைகேட்டது : அது எப்படி ?
யான் விடுத்தது : இறைவா , அஃது யானென்ன விருந்தது நாமாகத் தோன்றஇருந்த ஆரம்ப நிலை.
இறைகேட்டது : நான் வெளித்தோன்ற நினைத்தேன் என்கிறீரே அதன் தாற்பரியம் என்ன ?
யான் விடுத்தது : இறைவா , நானெனக்கூறும் நீ வெளித்தோன்ற நினைத்ததாலேதான் நாம் வெளிவந்தோம். நாம் வராவிட்டால் உம்மை எப்படி அறிந்து கொள்ள முடியும் ?
இறைகேட்டது : அப்போது என்ன நடந்தது ?
யான் விடுத்தது : சிறிது சிறிதாய் முழுமை பிரியத் தொடங்கிற்று.
இறைகேட்டது : நான் நாமானது எப்படி ?
யான் விடுத்தது : இறைவா , நான் மிக நுணுக்கமாய்ப் பிரிந்தேன் . நுண்ணணுக்களானேன் அப்படிப்பிரிந்த என்னிலிருந்தே ஐம்பூதங்களும்பிரிந்தன. இதுவேதான் நானாயிருந்த நான் நாமான வாறு.
(தாகிபிரபம் எனும் மெய்ஞ்ஞான இலக்கியக்கருவூலத்தில் சங்கைமிகு செய்கு நாயகம்அவர்கள் )