• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai     »      2014      »      Jul2014      »      மெய்யொளி பதிலகள்



மெய்யொளி பதிலகள் !


. மஜ்ஹர் அலி , குமாரபாளையம்.


இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் இறைவன்?


தனக்குத்தானே தன் கடமையைச் செய்து கொண்டு இருக்கிறான் .


ஜாபர் அலி , கோபாலபுரம்.

சில கூட்டங்கள், மவ்லித்ஓதக் கூடாது. தர்காக்களுக்குப் போகக் கூடாது என்பனவற்றை மட்டும் பிரதானமாகக்கூக்குரலிடுவது ஏன் ?


அறிவின்மை; பொறாமை; வயிற்றெரிச்சல்.

நெருப்பு விறகை விழுங்குவது போல பொறாமை நன்மையை விழுங்கிவிடும் . (நபிமொழி)



வஹ்ஜத் அலி , . . புதூர்.


எங்கள் பள்ளி இமாம் அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள்தாம்உள்ளன எனக் கூறுகிறார் . இது சரியா ? தவறா ? தவறெனில் விளக்கம் தருவீர் ?


அஸ்மாவுல் ஹுஸ்னா ( அழகிய திருநாமங்கள் ) 99 என்பர் . இறைவனை கோடானகோடி நாமங்கள் பெற்ற நாமமற்றவன் என முஹிய்யுத்தீன் இப்னு அரபி (ரலி) அவர்கள்கூறியுள்ளார்கள்திருக்குர்ஆனில் 25 நபிமார்கள் பெயர்தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதற்காக 1,24,000 நபிமார்கள் இல்லையென்று கூற முடியுமா ?



S. ஸாதிக் ராஜா , கருமண்டபம் .


மற்ற நபிமார்களை யா ஆதம், யா நூஹ், யா மூஸா, யா ஈஸா (அலைஹிமுஸ்ஸலாம்) என அழைக்கும் இறைவன், திருமறையில் யா முஹம்மத் என ஒருமுறை கூட அழைக்காததன் இரகசியம்என்ன ?


தானே தன்னில் தானான்.



V.M. ஹஸன் , பள்ளபட்டி .


கெளதுல் அஃலம் முஹிய்யுத்தீன் (ரலி) அவர்கள் ஒரு பறவையை ஏறிட்டுப் பார்த்ததால் அது எரிந்து சாம்பலாகி விழுந்தது என வரலாற்றில் கூறப்படுவதைசிலர் சுட்டிக் காட்டி. பறவையின் மீது இரக்கங்காட்டாதவர் எப்படி கெளது (இரட்சிப்பவர்) ஆவார் எனக்கேட்கின்றனர். தங்களின் பதில் ?


பூகம்பம், சுனாமி, வெள்ளம்முதலிய இயற்கை சீற்றங்களால் எண்ணற்ற உயிர்களை ஆட்கொள்ளும் இறைவனை இரட்சகன் என்று நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா ?


அழிப்பதை மட்டுமே காண்பவர்களுக்குஅருளைப் பற்றி அறிய முடியுமா ?



S. ஜக்கரிய்யா , இராமநாதபுரம் .


தரீகாக்கள் இதுவரை சாதித்ததென்ன ? இனி அவைகளின் முக்கியக் கடமைகள் என்ன ?


விருட்சத்திற்கு வேர்கள் . இஸ்லாத்திற்குதரீக்காக்கள்.



A. ஷேக் பரீது , மணப்பாறை .


சுப்ஹானல்லாஹ் என்பதற்கு அல்லாஹ்வைதூய்மையாக்குகிறேன் என ஆலிம்கள் பொருள் சொல்கிறார்கள் . இது பொருந்துமா ? இதன் உண்மைப்பொருள் என்ன ?


அல்லாஹ் - அத்வைதி - இரண்டற்றவன்.



S. காஜா ­ ஷரீஃப் , திண்டுக்கல்.


பாபமீட்சி என்பதென்ன ? தன்னையுணர்தலா ? தன்னையடைதலா ?


உள்ளதை உள்ளபடித் தெள்ளெனத் தெளிதல்.



A.N.M. அன்ஸாரி , தீரன் நகர்.


அனுஷ்டானம் இல்லாத நம்பிக்கையும்நம்பிக்கையற்ற அனுஷ்டானமும் ஏற்றுக் கொள்ளப்படாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் அமுத மொழி உணர்த்துவது என்ன ?


அனுஷ்டானம் இல்லாத நம்பிக்கை - கானல் நீர்

நம்பிக்கையற்ற அனுஷ்டானம் -   உடல் வருத்தம்

நம்பிக்கையுடன் கூடிய அனுஷ்டானம் - வழிபாடு



S. ரிஸூவான் சபீர் , மன்னார்குடி.


என்னைத் தான் ஏற்பதே தியானம்என்பதாக மகானந்த பாபா ( ரஹ் ) அருளுகிறார்கள் . அப்படி என்றால்?


குருவே மெய் ! மற்றவை அனைத்தும்பொய் !   என்பதை ஏற்பதேதியானம்.



A.M.J. சாதிக் , திருச்சி.


நாத்திகர்கள் , எல்லாம்இயற்கை என்கிறார்கள் . ஆன்மீகவாதிகளும் எல்லாம் இயற்கை என்கிறார்கள் . எங்கு வேறுபாடுஏற்படுகின்றது?


இயற்கை யை அறிந்து கொள்வதில் தான்.



A. உமர் பாரூக் , தேவிபட்டினம்.


மகான்களுக்கு ஃபாத்திஹா ஓதவேண்டுமென்றால் வீட்டிலிருந்து ஓதக் கூடாதா? அது போய்ச்சேராதா? என ஒருவர் கேட்கிறார். தங்கள் பதில்?


போனில் கேட்டும் மருத்துவம் செய்து கொள்ளலாம். மருத்துவரை நேரில் பார்த்தும் மருத்துவம் செய்து கொள்ளலாம்.



A.M. மீரான் , செல்வ நகர்.


எல்லாச் செயல்களும் அல்லாஹ்வின்செயல்களே என்றால் , அல்லாஹ்தான் பாபமும் செய்கின்றான் என்று பொருள் வராதா? என ஓர் ஆலிம்கேட்கிறார். தங்களின் பதில்?


ஷைத்தான் இறைவனின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவனா?



S.M. அபூபக்கர் , வளநாடு.


இந்துக்களும் சில முஸ்லிம்ஞானிகளின் பக்தர்களாக உள்ளனர் . சிலைகளை வணங்குபவர்கள் எப்படி பரிபூரணத்தை அடைய முடியும் ? மகான்கள் எந்த ஒரு தனித்த வஸ்துவையும் இறையாகக் கருத மாட்டார்கள்.


பூரணத்திலிருந்து பூரணம் வெளியானபிறகு பூரணமே எஞ்சியுள்ளது. இதுவே இந்து மத வேதாந்தசாரம்.



S. முஹம்மது பாரூக் , உறையூர்.


எல்லாம் ஒன்று எனச் சொல்பவர்கள்பள்ளிக்குச் செல்பவர்கள் ; இவர்கள் கோயிலுக்குச் செல்வார்களா ? என ஒருவர்கேட்கிறார்?


கோயிலுக்குச் செல்பவர்களிலும்எல்லாம் ஒன்று என்று என அறிந்தவர்கள் உண்டு . பள்ளிக்குச்செல்பவர்களிலும் எல்லாம் ஒன்று என அறியாதவர்களும் உண்டுஎல்லாம் ஒன்று என அறிந்தவர்கள் எல்லா இடத்திற்கும் செல்ல வேண்டுமா?



S. அஹ்மது பாட்சா , வழுத்தூர்.


மீலாது தினத்தன்று விடுமுறையளிப்பதால்சமுதாயத்திற்கு என்ன நன்மை? என ஒரு பிரசுரத்தில் சிலர் கேட்கின்றனர் . தங்களின்பதில்?


மாற்று சமுதாயத்தினரும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றியும் , இஸ்லாத்தைப்பற்றியும் சிந்திக்கத் தூண்டும்.



S. ஜானி பாஷா , தேக்கடி.


மவ்லிது ஓதுவதால் நபி   ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு புதிதாக புகழ் சேர்வதில்லைஎனக் கூறிக் கொண்டு ஏன் மவ்லித் ஓதுகிறீர்கள்? என ஓர் ஆலிம்கேட்கிறார் . தாங்கள் தாம் பதில் அளிக்க வேண்டும்?


எந்தத் தேவையும் அற்றவனாகியஇறைவனைத் தொழுவது எவ்வளவு அவசியமோ அதுபோல்தான் புகழாகவே இருக்கும் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் புகழுவதும் அவசியம் என்று கூறுங்கள்.