தலையங்கம்
முனேற்றப் பாதையில் …
“ மதுரஸாக்களை நவீனப்படுத்த அரசு கவனம் கொண்டுள்ளது ” என ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார் .
பாரதீய ஜனதா அரசு “ நவீனம் ” என்பதற்கு தங்கள் மனதில் என்ன பொருள் கொண்டுள்ளார்களோ அதை நாம் அறியோம் ! ஆனால் மதுரஸாக்கள் இஸ்லாமிய அச்சிலிருந்து விலகாமல் எப்படி நவீனமாக இருக்க வேண்டும் என்பதற்கு முன் மாதிரியாக சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் நமது மதுரஸாவை அமைத்திருக்கின்றார்கள் .
சமகாலக் கல்வி பெறாத ஓர் ஆலிம் தம் காலத்தில் வாழும் மக்களை வழி நடத்துபவராக இருக்க முடியாது . பள்ளிகளில் சொற்பொழிவாற்றும்போது பேசும் ஆலிமைவிட கேட்கும் அவாம்கள் - பொதுமக்கள் அதிக வி ஷயம் தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள் . எனவே உலகியலோடு மார்க்க இயலை ஒப்பிட்டு விளக்கும் அறிஞர்களின் உபதேசங்களே மக்களின் கவனத்தைத் திருப்புகிறது .
நமது மதுரஸா உலகியல் - மார்க்கவியலைக் கற்றுத்தருவதோடு மேலும் ஒரு சிறப்பைப் பெற்றுத்திகழ்கிறது .
தன்னையறியும் ஆன்மிக ஞான அறிவும் இங்கு கற்றுத்தரப்படுகிறது . இந்த முப்பரிமாணத்திட்டத்தில் மதுரஸா நாள்தோறும் முன்னேறி வருகிறது .
மதுரஸாவின் முன்னேற்றத் திட்டத்தின்படி ....
1. மஹல்லாக்கள் தோறும் சென்று பெற்றோர்களை அணுகி மாணவர்களை அதிகம் சேர்க்க முழு முயற்சி நடைபெறுகிறது . \
2. மாணவர்கள் படிப்பதற்கென - அறிவியல் பரிசோதனைக் கூடம் ( லேப் ) கட்ட ஆவன செய்யப்பட்டுள்ளது .
3. நமது ஆன்மிகக் கொள்கைகளை - நமது மாத இதழை - நமது நூல்களை நாமே அச்சிட்டுக் கொள்ள மல்டிகலர் அச்சகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது .
4. மதுரஸாவில் நிலையான வருமானத்திற்காக கடைகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு கட்டடப்பணி நடைபெற்று வருகிறது .
5. இன்ஷா அல்லாஹ் விரைவில் CBSC பள்ளியொன்று நிறுவ முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது .
6. இன்னும் அனேக புதுமைகள் நிகழவிருக்கின்றன . சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் அருளாணைக்கிணங்க நடைபெறும் இத்துணை பணிகளுக்கும் பொருள் பலம் மிகவும் தேவைப்படுகிறது .
இந்த ரமளானிலும் - அடுத்துவரும் குர்பானியிலும் முரீதுகள் தனிக் கவனம் செலுத்தி நிதி திரட்ட வேண்டுமென சங்கைமிகு செய்கு நாயகமவர்கள் விரும்புகிறார்கள் .
எனவே சமுதாயத்திற்கு நிலையான பயனைத் தரப்போகும் மதுரஸா வளர்ச்சியில் முழு மூச்சாய் முயன்று சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் ஆவலை நிறைவேற்றி அருளைப் பெறுவோமாக !