உமர் ( ரலி )புராணம்காவியம்
ஆசிரியர்
ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா
அல்ஹா ஷிமிய் நாயகம் அவர்கள்
முதலாவது உதய காண்டம்
இறையருட்பொழிக வேகனே யீக
நிறைதவத்தவர்க்கு நீடே யருள்க
நறையினின்ப நலம்பொரு டருக
கறையறவாழக் கரந்தரு வாயே.
கொண்டுகூட்டு :
இறைஅருள் பொழிக ஏகன் +ஏ ஈ க நிறைதவத்தவர்க்கு நீடே அருள்க.நறை இன் இன்பநல(மும்)பொருளும் தருககறை அற வாழக் கரம் தருவாயே.
பொருள்:
இறையோனே,உன் அருளைநமக்குப் பொழிவாயாக.ஏகனாகிய ஒருவனே,நமக்குக்கொடுப்பாயாக. நின்னைநாடி நற்றவஞ் செய்வோருக்குதெடர்ந்து அருள் புரிவாயாக.தேனை விடஇன்பமான நலத்தையும் பொருட்செல்வத்தையும் தந்தருள்வாயாக.அவ்வாறே ஈந்துகுற்ற மற்று வாழ்தற்கு உன்உதவியைத் தருவாயே.
குறிப்பு:
பொழிதல்: மழைபோற்பெய்தல். ஈதல்: கொடுத்தல்,நறை +இன் :தேனை விட.கறை :குற்றம்.கரம் :உதவி.