• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai       »     2014       »     Mar2014    »     அறியாதமக்கள்


திருமறைப் பக்கம்

அறியாதமக்கள்



மேலும்நீங்கள் அறியாதவற்றைஅல்லாஹ்விடமிருந்து நான்அறிவேன் ! (8.-7-63)



இந்தவாக்கியம் ஹள்ரத் நூஹ்அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களைஏற்றுக் கொள்ளாத தம் சமுதாயமக்களைப் பார்த்துக் கூறியது !

மனிதனின்உறுப்புகள் ஓர் வரையரைக்குஉட்பட்ட சக்தியைப் பெற்றவை .அதிலும்ஒருவர் பெற்ற ஆற்றல் போன்றுஇன்னொருவர் பெற்றிருப்பதில்லை .ஒருவனதுமூளைத்திறன் -சிந்திக்கும்ஆற்றல் -இன்னொருவனுக்குகிடைப்பதில்லை .ஒருகுடும்பத்துப் பிள்ளைகள்நன்கு படிப்பார்கள் .அதேகுடும்பத்து உறவினர் பிள்ளைகள்படிக்கும் திறன் குறைவாகஇருப்பர் .


நண்பர்இருவர் ,படிக்கும்காலத்தில் ஒன்றாக இருந்துபின்னர் கால ஓட்டத்தில்பிரிந்து என்றாவது ஒரு நாள்மீண்டும் சந்திக்கும்போதுஅதிலொருவன் மிகையாற்றல்பெற்றிருந்தால் அடடே அவனாஇவன் ? எனநம்பமுடியாமல் வியந்துபோவதுண்டு .நம்தெருவில் .....நம்வீட்டுக்கு அருகே வாழ்ந்தஒருவர் ...திடீரெனபெரிய மாற்றத்துடன் நம் முன்வந்து நின்றால் நாமும்அப்படித்தான் வியந்து போவோம் .


இதேபோன்றுதான் மக்களோடு மக்களாகவாழ்ந்த இறைத் தூதர்கள்திடீரென ஒரு நாள் இறைவனால்தேர்வு செய்யப்பட்டு ,பிறமக்களுக்குக் கொடுக்கப்படாதஅறிவுகள் கொடுக்கப்பட்டு ,இரகசியங்கள்காட்டப்பட்டு ,தம்மோடுவாழ்ந்த மக்களுக்கே வழிகாட்டுபவர்களாக நியமிக்கப்படும்போது , கூடஇருந்தவர்களால் நம்ப முடிவதில்லை .அப்போதுநபிமார்கள் ,தாம்ஏன் இவ்வாறு பேசுகிறோம் என்பதைநீங்கள்அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்துநான் அறிவேன் ! எனஉணர்த்துகிறார்கள் .


தங்களுக்கும்அவர்களுக்கும் ஏதோ வித்தியாசம்இருக்கிறது ...நாம்அறியாதவற்றை அவர்கள்அறிந்துள்ளார்கள் என ஒப்புக்கொண்டவர்கள் இறையடியார்களாகமாறிவிடுகிறார்கள் .நம்பமுடியாமல்மறுப்பவர்கள் அவர்களின்எதிரியாக மாறி ,அதன்மூலம் இறைவனுக்கே எதிரியாகமாறிப்போகிறார்கள் .


நபிமார்களுக்கு நடந்த   இதே  கதைதான்  இன்றும்  தொடர்கிறது .   இறைநேசர்களான வலிமார்கள்  பிறருக்கு  ஏற்படாத அறிவை - அனுபவத்தை- தாங்கள்உணர்ந்து  அனுபவித்து மக்களுக்குக்  கூறும்போது  ஆஹா !  இஃதென்ன  புதிய கதையாக  இருக்கிறதே !   நம்மோடுநாமாக வாழும்  இவர்  இறைநேசராம் ...   அவ்லியாவாம் ..எனஏகடியம் பேசி வழிகெட்டுப்போகிறார்கள் .    வஆதைனாஹுமின்லதுன்னா   இல்மா - நம்புறத்திலிருந்து  நாமே அவருக்கு அறிவு புகட்டுகிறோம்  என இறை மறை  கூறும்  இரகசியத்தை  விளங்கியவர்கள் தமக்கும்அவர்களுக்கும் உள்ள அறிவின்  இடைவெளியைப் புரிந்து   நேர்வழிபெறுவார்கள் .