• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai      »      2014     »      Mar   2014     »      உமர் ( ரலி ) புராணம்


உமர்   (   ரலி   )   புராணம்


ஆசிரியர்
ஜமாலிய்யாஸய்யிதுகலீல்அவ்ன்மெளலானா 
அல்ஹாஷிமிய்நாயகம்அவர்கள் 


அகழ்யுத்தம்



முரசி யம்புவாரியின்

திரைக ளொத்தவாசியின்

பரபரத்த நடையயாலி

பரந்தொலிக்க விடியயன

பெருபெருத்த வொட்டகை

இருபெ ருத்தமிடறுடன்

பருவதத்தை யயாத்தன

பொருக்களத்தின் காட்சியே



கொண்டுகூட்டு :

முரசுஇயம்பு வாரியின் திரைகள்ஒத்த வாசியின் பரபரத்த நடைஒலி இடியெனப் பரந்தொலிக்கபெரு பெருத்த ஒட்டகை இருபெருத்த மிடறுடன் பருவதத்தைஒத்தன பொருக்களத்தின்காட்சியாம்.


பொருள்:

பறையைத்தொடர்ந்து சாற்றிக் கொண்டிருக்கும்கடலின் அலைகள் போன்ற வெண்ணிறக்குதிரைகளின் தீவிரப்பட்டநடை ஒலி இடி போலும் பரந்தொலிக்க,மிகப் பெருத்தகழுத்துடன் நிற்பன மலைகளைஒத்தன இந்த யுத்த களத்தின்காட்சியாம்.


குறிப்பு:

முரசு:பறை,மேளம்.இயம்புதல்: அடித்தல்.வாரி :கடல்.திரை :அலை.வாசி :குதிரை.பரபரத்தல்: சுறுசுறுப்பு,தீவிரப்படல்.இரு :பெரு.மிடறு :கழுத்து.பருவதம்: மலை.பொருக்களம்: யுத்தகளம்