• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai       »    2014      »      Mar 2014   »      நினைவலைகள்

2014 இலங்கைமீலாது நினைவலைகள்…


ஆலிம்புலவர்



சென்றஇதழில் அதிரை ஷர்புத்தீன்ஹக்கிய்யுல் காதிரிய்அவர்களிடமிருந்து வந்ததொலைபேசி சற்று ஆறுதல் அளித்ததுஎனக் குறிப்பிட்டிருந்தேன்அல்லவா? அதுஎன்ன செய்தி என்றால்....?கர்நாடகாவிலிருந்துவரும் உருதுப் பாடகர் ஹனீப்ரஜாகாதிரி இந்த முறை தப் அடிக்க ஒருவரைஅழைத்து வர அனுமதி கேட்டிருந்தசெய்திதான். ஆம்!“தப் அடித்துப் பாடும்போதுஅதற்காகவே ஒரு மணி நேரம்தேவைப்படுமல்லவா?ஒரு பேச்சாளருக்குரியநேரத்தை அது நிறைவு செய்துவிடும்.எனவே மூன்றுசொற்பொழிவாளர்களை வைத்துவிழாவை நிறைவு செய்து விடவாய்ப்புண்டு என்ற எண்ணம்தான்.அல்ஹம்துலில்லாஹ்!ஆனால் நடந்ததுஎன்ன தெரியுமா?ஹனீப் ரஜாகாதிரி தப் அடிக்க ஒருவரையும்மேலும் முகம்மது நபீல் என்றஇளைஞரையும் அழைத்து வந்திருந்தார்.பார்ப்பதற்குஅமைதியாய், இந்தப்பூனையும் பால் குடிக்குமாஎன இருந்த அந்த இளைஞர் விழாஅன்று தன் பாடலால் எல்லோரையும்ஈர்த்துவிட்டார்.கடைசியில்நேரம் போதாது என்ற நிலைவந்துவிட்டது.சங்கைமிகுசெய்கு நாயகம் அவர்களே அவரதுபாடலை ரசித்துக் கேட்டு இவர்பெரிய பாடகராக வருவார் என துஆ செய்தார்கள்.பெருமானாரைப்போற்றிப்பாடும் அந்த இளைஞருக்குபெருமானாரின் திருப்பேரரின்துஆ கிடைத்தது.பெருமானாரேகொடுத்த பரிசு போல இருந்தது.சங்கைமிகுசெய்கு நாயகம் அவர்கள் அவருக்குஅந்த துஆவைச் செய்த போதுஏ.ஆர்.ரஹ்மான்வாப்பா நாயகம் அவர்களின்துஆவைப் பெற்ற காட்சி மனக்கண்களில்நிழலாடியது!


அடியேன்பாடல்கள் எழுதி,திரைப்படப்பாடகர் மர்ஹூம் ஷாஹுல் ஹமீதுஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்இசையமைத்துப் பாடிய யாநபியல்லாஹ் கேசட் வெளியீட்டுவிழா சென்னை கோகலே ஹாலில்நடைபெற்றது. சங்கைமிகுவாப்பா நாயகம் அவர்கள் வெளியிடஏ.ஆர்.ரஹ்மான்முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். பின்னர்விழா முடிந்ததும் ஏ.ஆர்.ரஹ்மான்சென்னை பெரியமெட்டில் வாப்பாநாயகம் அவர்கள் தங்கியிருந்தஎம்மார் அன்கோவிற்கு வந்துசெய்கு நாயகம் அவர்களைச்சந்தித்தார்.எப்போதும்போல்வாப்பா நாயகம் அவர்கள்நாற்காலியில் அமர்ந்திருக்க.அவர்கள்காலடியில் மிகப் பணிவுடன்அமர்ந்து அவர்களுடன் சற்றுநேரம் பேசிவிட்டு நல்லாசியையும்நல்ல துஆவையும் பெற்றுச்சென்றார். ஏ.ஆர்.ரஹ்மான்உலகையே தன் வசப்படுத்தும்இசையமைப்பாளராக உலாவருவார்....ஆஸ்கர்விருதெல்லாம் பெறுவார் எனஅப்போது யாரும் -ஏன்?ஏ.ஆர்.ரஹ்மானேஎண்ணியிருக்கமாட்டார்!


ஆனால்ஷாஹுல் ஹமீது அவர்கள் மூலம்வாப்பா நாயகம் அவர்களைச்சந்திக்கும் பேறு கிடைத்தஏ.ஆர்.ஆர்.ஆஸ்கர் அவார்டுவாங்குவதற்குரிய துஆவை அப்போதேபெற்றுவிட்டார் என்பது வரலாறுபதித்த உண்மையாகும்.


( தொடரும் )