தலையங்கம்
அஞ்சற்க ! அல்லாஹ் நம்முடன் !
முஸ்லிம்கள் மட்டுமல்ல . கிருத்தவர்கள் , தலித்கள் , ஏனைய சிறுபான்மையோர் அனைவருக்கும் அந்த அச்சம் தோன்றுவதில் வியப்பு ஒன்றுமில்லை . ஏனெனில் கடந்த கால ஆர் . எஸ் . எஸ்ஸின் வரலாறு நாட்டு மக்கள் அனைவரது மனத்திரையிலும் நிழலாடுகிறது. ஆனால் இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை அவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை .
ஏனெனில் , பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் . அவர்களின் அருமைத் தோழர் ஹள்ரத் அபூபக்ர் சித்தீக் ( ரலி ) அவர்களும் ஹிஜ்ரத் இரவில் பதுங்கிய தெளர் குகையை எதிரிகள் சூழ்ந்து நிற்க , அச்சப்பட்ட தோழர் அபூபக்ருக்கு அண்ணலார் “ அஞ்சாதீர் ! அல்லாஹ் நம்முடன் ” என்று ஆசுவாசப்படுத்தினார்கள் . அந்த வழிகாட்டுதல் இன்று எமக்கும் பொருந்துகிறது .
ஏனெனில் ....
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தில் இந்த சமுதாயம் அழிந்து விடவில்லை .
குழந்தைகளையெல்லாம் கொன்று குவித்த ஃபிர்அவ்னின் காலத்தில் இந்த சமூகம் அழிந்துவிடவில்லை .
நம்ரூதின் காலத்திலும் இது அழிந்துவிடவில்லை . அபூஜஹ்லின் அராஜகத்திலும் அழிந்துவிடவில்லை . அதற்குப் பின் தோன்றிய தார்த்தாரியார்கள் போன்ற அநியாயக்காரர்களின் படையெடுப்புகளாலும் இது அழிந்துவிடவில்லை .
குர்ஆனையும் - ஹதீஸையும் - பெருமானாரையும் - அவர்கள் பேரன்பையும் - சன்மார்க்கத்தையும் - சுமந்திருக்கும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் உதவி அவர்களின் ஏந்தும் கைகளுக்கும் கேட்கும் நாவுகளுக்கும் அருகிலேயே இருக்கிறது .
“சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் அருளுவார்கள் ; நம் எதிரிகள் நம்மைச் சோதிக்கவில்லை . அவர்களே சோதிக்கப்படுகிறார்கள் என .
எனவே முஸ்லிம்கள் அஞ்சாமல் அமைதியாக வாழ்வோம் ! நாம் நிம்மதியாக இருக்கும்வரை இந்தியாவும் நிம்மதியாக இருக்கும் என நம்பிக்கை கொள்வோம் .