பள்ளியில் பேணவேண்டிய ஒழுக்கங்கள்
மறைஞானப் பேழை நிறுவனர்
அஷ்ஷைகுல் காமில்
குத்புஸ்ஸமான் ஷ ம்ஸுல் வுஜூத்
ஜமாலிய்யாஅஸ்ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா
அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள்
மிஹ்ராஜ் என்பதுஇறைவனல்லாத மற்றெல்லாவற்றையும் விட்டு நீங்கியிருப்பது . இறைவனிலேயே தனது நாட்டத்தைச் செலுத்திஅவனல்லாது வேறில்லையென முழுமையாய் நினைத்து நானும் அதுவுமொன்றே அதற்கும் எனக்கும் எந்தப்பிரிவுமில்லை நான் பூரணமாய் அதிலானேன் எனக்கருதித் தன்னையும் தன் எண்ணத்தையும் முழுமையாய்அருப்பணிப்பதே மிஹ்ராஜ் எனும் உயர்ச்சியாகும் .
- ரிஸாலதுல்கெளதிய்யா - நூலில்சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் -
மஸ்ஜித் - பள்ளியில் பேணவேண்டிய ஒழுக்கங்கள்
- பள்ளிக்குள் நுழையும் போது ஸலாம் சொல்லி வலது காலை வைத்துநுழைய வேண்டும் .
- உட்காருவதற்கு முன்பாக பள்ளிக்காக இரண்டு ரக்அத்துகள் காணிக்கைத்தொழுகை தொழ வேண்டும் .
- விற்பனை செய்வதோ , வாங்குவதோ ( வியாபாரம் ) கூடாது .
- வாள் , கத்திபோன்ற ஆயுதங்களை தொங்கவிடக் கூடாது .
- காணாமல் போன பொருளைத் தேடிக் கொண்டிருக்கக் கூடாது .
- அல்லாஹ்வுடைய திக்ருகள் , ஸலவாத்துக்கள்தவிர வேறு எந்தப் பேச்சிற்காகவும் சத்தம் போட்டு கூச்சல் போடக் கூடாது .
- உலக சம்பந்தமான எந்தப் பேச்சுகளையும் பேசக் கூடாது .
- மக்களின் பிடரிகளைத் தாண்டி , இடித்துக்கொண்டு செல்லக்கூடாது .
- உட்காரும் இடத்திற்காக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது .
- தொழுகை அணி வகுப்பில் ( ஸஃப்பு ) ஒருவருக்கொருவர்நெருங்கிக் கொண்டு ( ருகூவு , ஸஜ்தாசெய்ய இயலாத சூழ்நிலைக்கு ) நிற்கக்கூடாது .
- பள்ளியில் எச்சில் மற்றும் உடல் அசுத்தங்களைச் செய்யக் கூடாது .
- நெட்டி ( சுடக்கு ) முறிக்கக்கூடாது .
- தொழுகை தொழும் நபர்களை உள்ளே கடந்து செல்லக் கூடாது .
- அசுத்தங்களை விட்டும் , சிறுவர்களைவிட்டும் , பைத்தியக்காரர்களை விட்டும் , தண்டனைகள்நிறைவேற்றுவதை விட்டும் பள்ளியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் .
- அல்லாஹ்வை அதிகமாக திக்ரு செய்தும் , பூமான்நபி ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள்மீது அதிகமாக ஸலவாத் ஓதிக் கொண்டும் இருக்க வேண்டும் . இவைகளை மறந்து பொழுதுபோக்காக , வீண்பேச்சுகளை பேசிக் கொண்டு இருக்கக் கூடாது .
குறிப்பு : மேற்கண்டஅனைத்து வி யங்களும் புகாரீ , முஸ்லிம் , அபூதாவூது , இப்னுமாஜா , நஸயீ , திர்மிதீபோன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன .
தொகுப்பாளர் : காயல்இப்னு யூசுப் என்கின்ற ஜெஸ்முத்தீன்