உமர் ( ரலி ) புராணம்
ஆசிரியர்
ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா
அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்
அகழ்யுத்தம்
( கலிவிருத்தம் )
உளவ றிந்தே யுரைக்க வந்தனன்
உளம றிந்தவு யர்ஸ பிய்யா
உளவ னைக்கொல வுரைத்தும் ஸாபித்
கிளவி கேட்டிலர் கெண்டற் செய்திலர்
கொண்டு கூட்டு :
( அந்தயூதன் ) உளவு அறிந்து உரைக்க வந்தனன். உளம் அறிந்த உயர் ஸபிய்யா உளவனைக் கொல உரைத்தும் ஸாபித் கிளவிகேட்டிலர் கெண்டற் செய்திலர்.
பொருள் :
அந்த யூத உளவாளி அந்த விடத்திற்குச்சென்று உளவு அறிந்து மற்றவர்களிடம் உரைக்க வந்தனன். இதனை உளத்தால் அறிந்த உயர்வுமிக்க ஸபிய்யா நாயகி ஸாபித்திடம் உளவனைக் கொல்லக் கூறினார். அதனை ஸாபித் கேட்டிலர் அவனைக்கொல்லவு மில்லை .
குறிப்பு :
உளவன் : உளவாளி . கிளவி : சொல் . கெண்டல் : கொல்லல் .