இலக்கியம்
பாட்டில் சிறந்தது தாலாட்டு
திருநெல்வேலியில் அமைந்த மேலப்பாளையத்தில் பிறந்தவர் அசனலியார். முஹம்மதலியார் என்பவரின் மகன். எகிப்திலிருந்து வந்தவர்கள். அவர் இயற்றியவற்றில் சிறப்புமிக்கது பஞ்சரத்தினத் தாலாட்டு , பூவடிச்சிந்து போன்றவை .அவர் தாலாட்டு 5 பிரிவுகளைக் கொண்டது .
- உடற்கூறறியும் ஞானத் தாலாட்டு
- ஃபாத்திமா ( ரலி )- அவர்களைப்ப ற்றிப் பாடும் சுகானந்தத் தாலாட்டு .
- முஹிய்யுத்தீன் ஆண்டகைப் பேரில் மணி மந்திரத்தாலாட்டு .
- ஷாஹுல் ஹமீது நாயகம் பேரிலான மீரான் தாலாட்டு .
- பாலகர்களை வாழ்த்தும் பாலகர் தாலாட்டு .
- நான்கு கலீபாக்களையும் ஒரே பாட்டில் பூட்டி தாலாட்டுப் பாடியுள்ளார் :
என்ற பாடல் எடுத்துக்காட்டாகும் .
வாய் வழித்தா லாட்டைப் போலில்லாமல் பொருள் செறிந்த ஆன்மீக அறவுரைகளை உள்ளடக்கிப் பாடியிருக்கிறார் இத்தாலாட்டை .
கண்ணை இமை பாதுகாப்பதைப் போல இறைச் சிந்தனைகளால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று பாடுகிறார் ..
இரமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள எமனேஸ்வரம் என்னும் சிற்றூரில் பிறந்து வளர்ந்தவர் . ஆசுகவி முஹம்மது மீர் ஜவாது புலவர் ( கி . பி 1745- 1808) சேதுபதி மன்னரோடு தொடர்புடையவர் . முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலி ) அவர்கள் பேரில் இயற்றிய பிள்ளைத்தமிழில் தாலப் பருவம் சிந்தையள்ளும் . 250 ஆண்டுகளுக்கு முன்னர் வட்டார மக்கள் பிள்ளையைத் தாலாட்டுப் பாடினார்கள் என்று சொல்லப்படுகிறது. கவிதை அருமையுணர்ந்தவர்கள் முஹிய்யுத்தீன் ஷேக்கின் மீது காதல் உள்ளவர்கள், அவர்களின் பாடல்களைப் பாடி வருகின்றனர் . பரவலாகத் தெரியாவிட்டாலும் மறைமுகமாகத் தாலாட்டு இலக்கியங்கள் பயன்படுகின்றன .
சுவைக்க சில வரிகள்
அரபி மொழியில் சுப்ஹான மவ்லிதுத் தாலாட்டு யார் எழுதியது என்று தெரியாது . மாதிஹுர் ரசூல் , சதக்கத்துல்லாஹ் அப்பா ( ரஹ் )(1632 - 1703 கி . பி ) அவர்கள் அறபுத் தமிழில் யாத் தளித்தார்கள் . சுற்று வட்டார மக்கள் தாலாட்டாகப் பாடி குழந்தைகளைத் தூங்கி விழிக்கச் செய்தார்களாம் .
மதுர கவி செய்யது அப்துல் காதிர் புலவர் . இவர் முத்துப் பேட்டையைச் சேர்ந்தவர். பயஹம்பர் அவதாரப் பல வண்ணச் சிந்து என்று ஒரு தாலாட்டுப் பாடல் எழுதியளித்துள்ளார் . இது ஆனந்த பைரவி ராகத் தோடும் ஆதிதாளத் தோடும் பாடக்கூடியது என்றும் ஆசிரியரே குறிப்பிடுகின்றார் .
ராரி ரி ராராரோ - என் கண்மணியே
ராரி ராராரோ - நான் பெற்ற மகனே - ராரி ரிரோ ராராரோ ... என்றுதொடங்குகிறார் .
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் .ஞானியார் சாஹிபு கோட்டாறு என்னும் தளத்தில் பிறந்தவர்கள் . தந்தை பெயர் ஷைகு அபூபக்கர் சாஹிபு . தாயார் பெயர் சையிது மீரான் பீவி . ஞானியார் சாஹிப் . கி . பி 1755- இல் பிறந்தார்கள். கி.பி 1794- இல் மறைந்தார்கள்.(ஹிஜ்ரி 1167- 1209 - ஜமாதுல் அவ்வல் மாதம் /4 ஆம்நாள் )
மெய்ஞ்ஞான திருப்பாடற்றிரட்டு என்ற நூலில் அவர்களது ஞானம் முழுவதும் திரட்டப்பட்டுள்ளது .
அப்பாவின் பாடல்களை வட்டார மக்கள் படித்துப் படித்து மனச் சோலையிலே பயிரிட்டவர்கள் . குழந்தைகளைத் தாலாட்டாத தாயுண்டோ ?. நெஞ்சில் கொஞ்சி விளையாடும் பாடல்களையே தாலாட்டாகவும் பாடினார்கள் . தொட்டிலில் கேட்ட பாட்டைக் கொண்டு பட்டித் தொட்டிகளிலெல்லாம் ஞானப் பிள்ளைகள் முளைத்தனர் . சினிமாப் பாடல்கள் இல்லங்களில் படையெடுத்த இந்நாளிலும் , அப்பாவின் பாட்டு தாலாட்டாகப் பரிணமித்திருக்கிறது .
அப்பாவின் இப்படிப்பட்ட பாடல்களையும் பாடி குழந்தைகளைத் தூங்கச் செய்திருக்கிறார்கள். ஞானியார் அப்பாவின் மற்றொரு பாட்டு கும்மி. தாய்மார்களுக்கு ரொம்பப் பிடித்தது . கும்மிப் பாட்டைக் கேட்டு கம்மென்று தூங்கினார்கள் பிள்ளைகள் .
ஜீவரத்தின கவிராஜர் சையது மீறா லெப்பை அண்ணாவியார் யாத்த சிற்றிலக்கியம் மதீனக் கலம்பகம் என்பதாம் . தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய ஞானக் கோட்டைகளில் ஒன்று அதிராம்பட்டினம் . அந்த ஆன்மிக மண்ணில் பிறந்தவர். ஹிஜ்ரி 1275- இல் வாழ்ந்தவர் . இவர் ஓர் அருட்கவிஞர் .
இவர் இயற்றிய கலம்பகத்தில் ஊசல் ஓர் உறுப்பாக வரும் . ஊஞ்சற் பாட்டை அக்காலப் பெண்கள் மிக்க ஆர்வத்துடன் பாடுவார்கள் . ஒரு பெண் பாட்டைக் கேட்டுக் கற்றுப் பாடுவார் . அதை மற்றப் பெண்களும் மனப்பாடம் பண்ணிக் கொள்ளும் பழக்கமும் இருந்தது . கடினமான பாடல்களையும் மனப்பாடம் செய்து விடுவர் . சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண்டிர் பாடினர் .
என்று பாடி தாலாட்டாகவும் பாடினார்கள் .
தாய் நாவை அசைத்து ஒலியை இசைப்பதெல்லாம் தாலாட்டுத் தான் ! ஆண் குழந்தைத் தாலாட்டு , பெண் குழந்தைத் தாலாட்டு என்று பகுத்துப் பாடிய புலவர்களும் உண்டு .கவிஞானி மஹ்பூப் சுப்ஹானி 290 பாடல்கள் கொண்ட மதுரத் தாலாட்டுப் பாடியளித்துள்ளார் .
ஆலிம் கவிஞர் தேங்கை . மு . ஷர்புதீன் மிஸ்பாஹி அவர்கள் தொட்டில் முனாஜாத் என்ற தாலாட்டைப் பாடியுள்ளார் . இலங்கையைச் சேர்ந்த திருமதி சாரணா கையூம் அவர்களின் இஸ்லாமியத் தாலாட்டு மாலை சிறந்த நெறிகளை வளர்க்கும் பாடல்களாக விளங்குகின்றன . பக்தி மார்க்கம் மேலோங்கியக் காலத்தில் ஞானத் தலைவர்கள் பாட்டுடைத் தலைவர்களாக தாலாட்டில் இடம் பெற்றுள்ளார்கள் . எல்லாக் காலங்களையும் அனுசரித்தே கவிஞர்கள் தம் கருத்துக்களைத் தாலாட்டில் பயன்படுத்தியுள்ளனர் .
பாட்டிற் சிறந்தது தாலாட்டு !”