Pezhai » 2014 » Aug2014 » தத்துவக் கொத்து
தத்துவக் கொத்து
உள்ளத்தே உணர்
அல்லாஹ்வைத் தேடித் திரியாதே . நெஞ்சத்தினுள் அவன் வீற்றிருப்பதை உணர்ந்து கொண்டிரு. பக்கத்தில் படுத்துறங்கிய தன் தாயின் மீது வேற்றார் உடையைப் போட்டு யாரோ மூடி விட்டார்கள். எழுந்திருந்த குழந்தை தன் தயைக் காணவில்லையேஎன்று வீடெல்லாம் தேடிப்பார்த்து அழுததாம். தாயினும் சாலப் பரிந்து பராமரிக்கும்பரம் பொருளாகிய இறைவன் ( அல்லாஹ் ) உள்ளத்தினுள் உறைவதை உணர்ந்து கொள் .
கஸ்தூரி மானின் உடலிலிருந்து தான் கஸ்தூரி உண்டாகிறது . எனினும் , அதன் வாசனையைத் தேடி , நாடி , அது பிற காடுகளிளெல்லாம் தேடியலைகிறது . தான் தேடுவது தன்னிடத்தே இருப்பது அதற்குத் தெரியாது . அவ்வாறே மனிதன் , தனது மனத்தகத்து வதியும் இறையைக் கண்டு கெண்டால் , உலகெல்லாம் அதே இறை நிறைந்திருப்பதை அவன் உணர்வான் .
அருள் வேட்கை
நீர் வேட்கை பிடித்த மான் நீரின் பெருட்டு அலைவது போன்று இறைவா ! நான் உன் பெருட்டு வேட்கை கொண்டிருப்பேனாக. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒருவித வேட்கை இருக்கிறது . அதன் பொருட்டு அவன் முயற்சி மிக எடுத்துக் கெள்கிறான் .வேட்கைகளுக்கெல்லாம் , அல்லாஹ்வுக்காக வென்று உண்டாகும் வேட்கையே ஒப்பு உயர்வு அற்றது .
உடம்பு
உடம்பாகிய என்னுள்ளே , உயிராகிய இறைவா ! உன்னை நீ விளக்கியருள்வாயாக .
உயிரை விளக்குவதற்கென்றே உடல் இருக்கிறது. உயிர் இல்லாவிட்டால் உடல் பிணமாய்விடும் . பின்பு , உடம்பினைப் பண்படுத்துமளவு , அதனுள் உயிரானது ஓங்கி மிளிரும் .
உயர்பாடம்
நல்லவரிடமிருந்து நல்ல பாடத்தை நான் கற்றுக் கொள்வேனாக . சமயக்குறவர் ( ஞானி ) ஓருவரைக் குவலயத்தில் காண்பது அரிது . ஒருவேளை நூறு அல்லது ஆயிரம் வருடத்திற்கு ஒரு தடவை ஒருவர் வரலாம் . அத்தகையவர் நல்வாழ்வு வாழ்ந்து , உலகுக்கு நல்வழி காட்டுகிறார் . புத்தகங்களும் , பிரசங்கங்களும் பின்னணிக்குப் போய்விடுகின்றன . எத்தகைய வாழ்வு மனிதன் வாழ வேண்டுமென்று அவர் தாமே வாழ்ந்து காட்டுகிறார் . வாய்ப்பேச்சாலல்ல . வாழ்க்கையின் மூலம் புகட்டும் பாடமே உயர்வானது .
தந்திரம்
இறைவா ! உன்னை நான் அடைவதற்கான தந்திரத்தை புகட்டியருள்வாயாக . ஒவ்வொரு இயந்திரத்தையும் முறையாகக் கையாளுவதற்கு உற்ற உபாயம் உண்டு . அந்த உபாயத்திற்குத் தந்திரம் என்றும் பெயர் .
உன்செயல்
இப்பிரபஞ்சத்தில் காண நிகழ்வனதெல்லாம் இறைவா ! அது உன் செயல் தான் . என் செயல் என் செயல் என்று சிலவற்றை மக்கள் உரிமை பாராட்டி , பந்தபாசத்தை உண்டு பண்ணிக் கொள்கிறார்கள் . என்ன மடமை !
மின்சக்தியால் இயக்கப் பெற்றுச் சக்கரம் சுழல்கிறது . விளக்கு எரிகிறது . ஒலி பெருக்கி ஓலமிடுகிறது . அடுப்பு , வெப்பம் கொடுக்கிறது . அப்படி இறை ஆணையால் ( இயற்கையில் ) யாவும் நடைபெறுகின்றன. இதை அறியாத மனிதன் , தன்னைச் செயலுக்குக் கர்த்தாவாக்கிக் கொள்கிறான் .
( இன்ஷாஅல்லாஹ் அடுத்து வரும் )