துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 5/10/2012 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு, சங்கைமிகு புர்தா ஷரீப் ஓதப்பட்டு அதைத் தொடர்ந்து இமாம் அஸ்செய்யிது யாசீன் மௌலானா அவர்களின் கஸீதா ஓதப்பட்டு,
அதைத் தொடர்ந்து, தந்தை நாயகத்தின் விசால் தினத்தை நினைவு கூறும் பொருட்டு கந்தூரி விழா நடைபெற்றது.
இவ்விழா மௌலானாமார்களின் முன்னிலையில், முஹம்மது யூசுப் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆன்மீகச் சகோதரர்கள் பலரும், தந்தை நாயகத்தின் இஸ்லாமிய தொண்டைப்பற்றியும், தமிழ் இஸ்லாமிய உலகிற்கு அவர்கள் அளித்த அறபு தமிழ் அகராதி, புகாரி ஷரீப் விளக்க உரைப் பற்றியும், ஷெய்கு நாயகத்தின் கராமத் பற்றியும் உரையாற்றினார்கள்.
சிறப்புக்குரிய இவ்விழாவிற்கு ஏராளமானோர் கலந்து சிறப்பித்தார்கள்.
இவ்விழா 11.45 மணிக்கு நிறைவுப்பெற்றது அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.


.jpg)





புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்
முதுவை அஹமது ஹிம்தாதுல்லாஹ்