துபாய் சபையில் 03/05/2012 வியாழன் மாலை மஹ்ஃரிப் தொழுகைக்கு பின் பிறை 14லின் இராத்திபத்துல் காதிரிய்யா நிகழச்சி நடைபெற்றது. ஆன்மிக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
துபாய் சபையில் 04/05/2012 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு நாகூர் பாதுஷா நாயகத்தின் 455வது கந்தூரி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலை 9.00 மணிக்கு பாதுஷா நாயகத்தின் மௌலிது ஓதி சங்கை செய்யப்பட்டது.
பின் கிராஅத்துடன் சொற்பொழிவு நிகழ்ச்சி துவங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு கலீபா முஹம்மது முஸ்தபா தலைமை வகித்தார்கள்.மௌலானாமார்கள் முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் புதிதாக இந்த ஆண்டு பைஅத் பெற்ற மதுக்கூர் முஹம்மது ரூமி ஹக்கியுல்காதிரி சொற்பொழிவில் தனது அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கு பல அமைப்புகளிலிருந்தும் ஊர் ஜமாஅத்திலிருந்து வருகைப்புரிந்து நாகூர் பாதுஷா நாயகத்தின் அருளைப் பெற்றார்கள்.
பகல் 12.00 மணிக்கு கூட்டம் நிறைவடைந்தது அனைவருக்கும் கந்தூரி வழங்கப்பட்டது.
புகைப்படங்கள் - முதுவை அகமது ஹிம்தாதுல்லாஹ்