Pezhai » 2015 » Jan2015 » உமர் (ரலி) புராணம்
உமர் (ரலி) புராணம்
ஆசிரியர்
ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹா´மிய் நாயகம் அவர்கள்
அகழ்யுத்தம்
(கலிவிருத்தம்)
இனத்தவ ரறிகில ரிஸ்லா மாயினர்
சினத்தவ ரிகறமை சிதைத்திட வேண்டும்
எனத்தவ நபிக ளிசைந்து செப்பி
பனத்தவ ரெவரோ பகைந்திட வேண்டும்
கொண்டுகூட்டு:
இனத்தவர் அறிகிலர் இஸ்லாம் ஆயினர். சினத்தர் இகல் தமை சிதைத்திட வேண்டும். எனத்தவ நபிகள் இசைந்து செப்பி பனத்து அவர் எவரோ பகைந்திட வேண்டும்
பொருள்:
இனத்தவர்கள் அறியாதபடி நஈம் இஸ்லாமாயினர். சினங்கொண்டவர்களாகப் பகைவர்களை நாலாபக்கமும் சிதைய சிதைத்திட வேண்டும் என்றவாறு தவத்தையுடைய நபிகள் நாதர் இசைவுடன் சொல்லி, அவர்களில் தற்பெருமை கொண்ட தலைவர்களாக எவர்கள் இருக்கிறார்களோ அவர்களைப் பகைத்துவிட வேண்டும் (என்றார்கள் நபிகள் நாதர்)
குறிப்பு:
இனத்தவர் : சொந்தக்காரர். அறிகிலர் : அறியாதபடி . சினம் : கோபம். இகல் : பகைவர். இசைந்து : விரும்பி, உடன்பட்டு, பொருந்துதல். செப்பல் : சொல்லல். பனத்தவர் : பனம் + அத்து + அவர் : தற்பெருமை கொண்டவர்; தலை பருத்தவர்.